சங்க காலம்
From Wikipedia, the free encyclopedia
சங்க காலம் (Sangam period) என்பது பண்டைய தென்னிந்திய வரலாற்றில் நிலவிய தமிழகம் தொடர்பான ஒரு காலப்பகுதியாகும். இது குறிப்பாக மூன்றாவது சங்க காலத்தைக் குறிப்பிடுவதாகும். இக்காலப்பகுதி பொ.ஊ.மு. ஆறாம் நூற்றாண்டில் இருந்து பொ.ஊ. மூன்றாம் நூற்றாண்டு வரை நீடித்திருந்தது.[1] மதுரையை மையமாகக் கொண்டு தமிழ்ப்புலவர்கள் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தனர் என்ற காரணத்தால் இக்காலப்பகுதிக்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.
- "ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
- மாங்குடி மருதன் தலைவன் ஆக,
- உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின்
- புலவர் பாடாது வரைக, என் நிலவரை;" -- ( புறம்:72 )
சங்க காலம் | |
---|---|
புவியியல் பகுதி | இந்தியத் துணைக்கண்டம் |
காலப்பகுதி | இந்தியாவின் இரும்பு யுகம் |
காலம் | அண். 600 BCE – அண். 300 CE |
முக்கிய களங்கள் | கீழடி அகழாய்வு மையம், கொடுமணல் தொல்லியற்களம், ஈரோடு, அரிக்கமேடு, சாளுவன்குப்பம் முருகன் கோவில், ஆதிச்சநல்லூர் |
சங்க காலம், மூன்றாம் சங்க காலம், கடைச்சங்க காலம் |
என்று பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் பாடியுள்ள புறநானூற்றுப் பாடல் வரிகளே இத்தகைய புலவர்கள் கூட்டம் இருந்ததற்குச் சான்றாகும்.
முற்காலத் தமிழ் மொழியில் தமிழகம் என்ற சொல் 168 ஆவது புறநானூற்றுப் பாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி தமிழகம் என்று குறிக்கப்பட்ட இப்பகுதி முழுவதுமாக தமிழ்மொழி பேசும் மக்கள் வாழும் பகுதியாகும். தற்பொழுது இப்பிரதேசம் தோராயமாக தற்காலத் தென்னிந்தியா என்பதாக அறியப்படுகிறது. இத்தென்னிந்தியப் பகுதியில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப்பிரதேசம் சில பகுதிகள், கர்நாடக மாநிலத்தின் சில பகுதிகள், இலங்கை முதலிய பகுதிகளும் அடங்கும்.[2][3][4][5]