![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d3/Nelumno_nucifera_open_flower_-_botanic_garden_adelaide2.jpg/640px-Nelumno_nucifera_open_flower_-_botanic_garden_adelaide2.jpg&w=640&q=50)
தாமரை
From Wikipedia, the free encyclopedia
தாமரை (lotus), ஒரு நீர்வாழ் பல்லாண்டுத் தாவரம். இதன் அறிவியல் பெயர் நெலும்போ நூசிபேரா (Nelumbo nucifera) என்பதாகும்.
தாமரை | |
---|---|
![]() | |
தாமரை பூவும் இலைகளும் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | மக்னோலியோப்சிடா |
வரிசை: | பிரோடீல்சு |
குடும்பம்: | நெலும்போனேசியே |
பேரினம்: | நெலும்போ |
இனம்: | நூசிபேரா |
இருசொற் பெயரீடு | |
நெலும்போ நூசிபேரா Nelumbo nucifera கார்ட்னர் | |
தாமரை செடிகள் மெதுவாக நகரும் ஆறுகள் மற்றும் வெள்ள சமவெளி பகுதிகளில் வளர ஏற்றது. தாமரை செடிகள் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான விதைகளை நீர்நிலைகளில் இடுகின்றன. இவற்றில் சில விதைகள் மட்டுமே உடனடியாக துளிர்விடுகின்றன. பெரும்பாலானவை வனவிலங்குகளால் உண்ணப்படுகின்றன, மீதமுள்ள விதைகள் நீர் நிலைகள் வரைந்தாலும் நீண்ட காலத்திற்கு செயலற்ற நிலையில் அப்படியே இருக்கும். மீண்டும் தண்ணீர் வரும் போது இந்த விதைகள் துளிர்விடுகின்றன. சாதகமான சூழ்நிலையில், இந்த விதைகள் பல ஆண்டுகள் வரை இருக்கும். சீனாவில் 1300 ஆண்டுகள் பழமையான தாமரை விதை பின்னர் முளைத்துள்ளது.
இது இந்தியாவில் இருந்து தெற்கு இமயமலைப் பகுதிகள், வடக்கு சீனா, கிழக்கு ஆசியா மற்றும் உருசியா வரை காணப்படுகின்றது.[1][2] இன்று, இந்த இனம் தென்னிந்தியா, இலங்கை, தென்கிழக்கு ஆசியா, நியூ கினியா மற்றும் வடக்கு மற்றும் கிழக்கு ஆத்திரேலியா முழுவதிலும் காணப்படுகிறது.[2] இது உண்ணக்கூடிய விதைகளுக்காக பயிரிடப்படுகின்றது. இது ஏறத்தாழ 3,000 ஆண்டுகளுக்கும் மேலாக பயிரிடப்படுகிறது.[1] இது இந்தியா மற்றும் வியட்நாமின் தேசிய மலராகும் .
தாமரைப்பூவானது பண்டைய இந்தியா மற்றும் எகிப்து நாடுகளில் புனிதமானதாகப் போற்றப்பட்டதுடன், வழிபாட்டுக்கும் பயன்படுத்தப்பட்டது. தாமரையின், பூக்கள், இதழ்கள் என்பவை அக்காலச் சமயத்துறை மற்றும் கட்டிடக்கலை அலங்காரங்களிலும் காணப்படுகின்றது. பண்டைய இந்தியப் புராணங்களிலும் பழங்கால இந்திய மருந்து வகைகளிலும் தாமரை இடம் பிடித்துள்ளது.