நாகார்ஜுனகொண்டா
பௌத்தப் புனிதத் தலம், ஆந்திரப் பிரதேசம் / From Wikipedia, the free encyclopedia
நாகார்ஜுனகொண்டா (Nagarjunakonda) (நாகார்ஜுன மலை எனப் பொருள்) இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் குண்டூர் மாவட்டத்தில் நாகார்ஜுன சாகர் எனுமிடத்தில் அமைந்த வரலாற்று சிறப்புமிக்க பௌத்தப் புனிதத் தலம் ஆகும்.[1][2][3]
விரைவான உண்மைகள் நாகார்ஜுன கொண்டா, அமைவிடம் ...
நாகார்ஜுன கொண்டா | |
---|---|
உள்ளூர் பெயர் నాగార్డున కొండ | |
கி மு 3-ஆம் நூற்றாண்டின் பௌத்த தலம் | |
அமைவிடம் | குண்டூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
ஆள்கூற்றுகள் | 16°31′18.82″N 79°14′34.26″E |
கட்டப்பட்டது | கி மு 225 - 325 |
கட்டிட முறை | ஆந்திர பௌத்தக் கட்டிடக் கலை |
நிர்வகிக்கும் அமைப்பு | இந்தியத் தொல்லியல் ஆய்வகம் |
மூடு
முன்னர் ஸ்ரீபர்தவதம் என்று அழைக்கப்பட்ட இம்மலையை, கி மு இரண்டாம் நூற்றாண்டில் தென்னிந்தியவில் வாழ்ந்தவரும், மகாயான பௌத்தத்தைப் பரப்பியவருமான பௌத்த அறிஞர் நாகார்ஜுனரின் பெயரால் தற்போது நாகார்ஜுனகொண்டா என்று அழைக்கப்படுகிறது.
பௌத்தப் புனிதத் தலமான அமராவதி கிராமத்திலிருந்து [4] மேற்கில் 160 கிலோ மீட்டர் தொலைவில் நாகார்ஜுனகொண்டா அமைந்துள்ளது.
சீனா, காந்தாரம், வங்காளம் மற்றும் இலங்கை போன்ற நாடுகளிலிருந்து நாகார்ஜுனகொண்டாவில் உள்ள பௌத்த சமயக் கல்வி மையங்களிலும், விகாரங்களிலும் பௌத்த பிக்குகள் தங்கிப் படித்தனர்.