நெகிரி செம்பிலான் துவாங்கு அப்துல் ரகுமான்
மலாயாவின் 1-ஆவது, யாங் டி பெர்துவான் அகோங் / From Wikipedia, the free encyclopedia
நெகிரி செம்பிலான் துவாங்கு சர் அப்துல் ரகுமான் GCMG (ஆங்கிலம்: Tuanku Sir Abdul Rahman ibni Almarhum Tuanku Muhammad; மலாய்: Tuanku Sir Abdul Rahman ibni Almarhum Tuanku Muhammad; சாவி:وانكو سر عبدالرحمن ابن المرحوم توانكو محمد ); (பிறப்பு: 24 ஆகஸ்டு 1895 - இறப்பு: 1 ஏப்ரல் 1960) மலாயாவின் 1-ஆவது, யாங் டி பெர்துவான் அகோங் எனும் (மலேசிய அரசர்) ஆவார். இவர் 1933-ஆம் ஆண்டில் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் யாம் துவான் பெசார் ஆட்சியாளரும் ஆவார்.[1]
நெகிரி செம்பிலான் அப்துல் ரகுமான் Abdul Rahman of Negeri Sembilan عبدالرحمن | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
துவாங்கு அப்துல் ரகுமான் (1950-களில) | |||||||||
மலேசியாவின் முதலாவது பேரரசர் | |||||||||
ஆட்சிக்காலம் | 31 ஆகஸ்டு 1957 - 1 ஏப்ரல் 1960 | ||||||||
முடிசூட்டு | 2 செப்டம்பர் 1957 | ||||||||
முன்னையவர் | இரண்டாம் எலிசபெத் (மகாராணி) | ||||||||
பின்னையவர் | சிலாங்கூர் சுல்தான் இசாமுடின் | ||||||||
நெகிரி செம்பிலான் யாம் துவான் பெசார் | |||||||||
ஆட்சிக்காலம் | 3 ஆகஸ்டு 1933 - 1 ஏப்ரல் 1960 | ||||||||
முடிசூட்டு | 25 ஏப்ரல் 1934 | ||||||||
முன்னையவர் | நெகிரி செம்பிலான் முகமட் | ||||||||
பின்னையவர் | நெகிரி செம்பிலான் முனாவிர் | ||||||||
பிறப்பு | (1895-08-24)24 ஆகத்து 1895 இசுதானா செரி மெனாந்தி, செரி மெனாந்தி, நெகிரி செம்பிலான், மலாயா கூட்டமைப்பு மாநிலங்கள் | ||||||||
இறப்பு | 1 ஏப்ரல் 1960(1960-04-01) (அகவை 64) இசுதானா நெகாரா மலேசியா, கோலாலம்பூர், மலாயா | ||||||||
புதைத்த இடம் | 5 ஏப்ரல் 1960 | ||||||||
துணைவர் | எங்கு மைமுனா பிந்தி அப்துல்லா (டல்சி கேம்ப்பெல்) துங்கு மகாருன் பிந்தி தெங்கு மாம்பாங் துங்கு குர்சியா பிந்தி துங்கு பெசார் புர்கானுதீன் (1929 - 1960) துங்கு சைதா பிந்தி துங்கு சகாரியா | ||||||||
குழந்தைகளின் பெயர்கள் | துங்கு அயிடா நெகிரி துவாங்கு சாபார் துங்கு சீலா துவாங்கு அப்துல்லா நெகிரி செம்பிலான் முனாவிர் சுல்தானா பகியா துங்கு சகாரியா துங்கு நூரைடா சாக்கியா பர்ரா இசதுல் | ||||||||
| |||||||||
மரபு | பகாருயோங் | ||||||||
தந்தை | துவாங்கு முகம்மது இப்னி அல்மர்கும் துவாங்கு அந்தா | ||||||||
தாய் | துங்கு அலிஜா பிந்தி துங்கு மூட சிக் | ||||||||
மதம் | இசுலாம் |
1957 ஆகஸ்டு மாதம் 31-ஆம் தேதி மலாயா விடுதலை அடைந்த நாள் தொடங்கி 1960 ஏப்ரல் 1-ஆம் தேதி, அவர் இறக்கும் வரையில் மலேசிய அரசர் பதவியை வகித்தார்.
1967 சூன் 12-ஆம் தேதி, துவாங்கு அப்துல் ரகுமானின் உருவப்படம், மலேசியாவில் முதன்முதலில் வெளியிடப்பட்ட முதல் மலேசிய ரிங்கிட் தாட்களின் முகப்பில் இடம்பெற்றது. தொடர்ந்து அவரின் உருவப்படம் இதுவரையிலும் இடம்பெற்று வருகிறது.