From Wikipedia, the free encyclopedia
பூதனை (இலக்கியத்தில் "அழிவு") என்பவர் பாகவதம் போன்ற இந்து தொன்மவியல் புராணங்களில் குறிப்பிடும் ஓர் அரக்கி ஆவார். குழந்தை கடவுளான கிருஷ்ணரால் கொல்லப்பட்ட அரக்கியாவார். இந்திய புராணங்களில் கிருஷ்ணரை விஷம் கலந்த பாலால் கொல்லும் நோக்கத்துடன் இருந்தாலும், கிருஷ்ணருக்கு தாய்ப்பால் கொடுத்ததால் பூதனை கிருஷ்ணன வளர்ப்புத் தாயாகவும் கருதப்படுகிறார், ஆனால் தனது பாலை வழங்குவதன் மூலம், பூதனை தனது தீய நோக்கங்களின் நிழலில் "தாய்வழி பக்தியின் மிக உயர்ந்த செயலை" நிகழ்த்தியிருந்தார். [1] புராணம், இந்து வேதங்களிலும் சில இந்திய புத்தகங்களிலும் பூதனை தொடக்கத்தில் கிருஷ்ணரைக் கொல்லும் தீய நோக்கத்துடன் வந்திருந்தாலும் அவளை ஒரு தீய விகாரமான கிழவி அல்லது கிருஷ்ணரிடம் சரணடைந்த ஒரு பேய் என மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது,.
பூதனை என்பது ஒரு குழந்தைசார் நோய் அல்லது பறவை என்று உட்பொருள் கொள்ளப்படுகிறது, இது முறையே ஒரு குழந்தை அல்லது ஆசைக்கான ஆபத்தைக் குறிக்கிறது, மேலும் ஒரு கெட்ட தாய்க்கான குறியீடாகவும் கருதப்படுகிறது. . இந்து மதத்தில் பூதனை தீய எண்னமுள்ள தாய்த் தேவதைகளின் குழுவில் சேர்க்கப்படுகிறார். மேலும் அவர் மாத்திரிகைகள் , யோகினிகள் மற்றும் கிரகானிகள் (Seizers).குழுவிலும் சேர்க்கப்படுகிறார். பண்டைய இந்திய மருத்துவ நூல்கள் குழந்தைகளை நோய்களிலிருந்து பாதுகாக்க பூதனை வழிபாட்டை பரிந்துரைக்கின்றன. பண்டைய இந்திய நூல்களில் பல பூதனைகளின் குழு குறிப்பிடப்பட்டுள்ளது.
"பூதனா" என்ற சொல், "பூதா" (சுத்திகரிப்பு) என்பதிலிருந்து உருவானது, இதன் பொருள் "சுத்திகரிப்பவள்". என்பதாகும். பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளுடன் தொடர்புடைய இந்து புராணங்களில் ஒரு நரகமான "புத்" என்பதிலிருந்து "பூதனா" உருவானது என்று ஹெர்பர்ட் கருதுகிறார். [2] ஆகவே, பூதனை தாய்மையுடன் நெருக்கமாக இணைந்திருப்பதாக சொற்பிறப்பியல் மற்றும் மாத்ரிகைகளுடனான அவரது தொடர்பின் அடிப்படையில் ஹெர்பர்ட் முன்மொழிகிறார். [3] வொயிட் என்ற நூல் பூதனாவை "துர்நாற்றம்" என்று மொழிபெயர்க்கிறது. மேலும் அதைச் சின்னம்மையின் கொப்புளங்கள் அல்லது புண்களுடன் தொடர்புபடுத்துகிறது. பூதனை என்பது ஓர் ஆயுதத்தின் பெயர் அல்லது பெரியம்மைக்கானகடவுளான சீத்தலா தேவியின் அவதாரமாகக் கருதப்படுகிறார். . [4]
பூதனை மற்றும் கிருஷ்ணரின் புராணக்கதை பகவத புராணம், ஹரிவம்சா ( மகாபாரதத்தின் ஒரு பகுதி), பிரம்மா வைவர்த்த புராணம், விஷ்ணு புராணம், கிரக சம்ஹிதா மற்றும் பிரேம் சாகர் ஆகிய பல இந்து நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளது:. [5]
"குழந்தைகளின் கொலையாளியான" பூதனை (பூதனா எனவும் அழைக்கப்படுகிறார்), குழந்தைக் கிருஷ்ணனைக் கொல்ல, கிருஷ்ணரின் தீய தாய் மாமனான கம்சன் என்பவனால் அனுப்பப்படுகிறார்.
பூதனை ஒரு அழகான இளம்பெண்ணின் மாறுவேடத்தை ஏற்றுக்கொண்டு, கிருஷ்ணரின் சொந்த ஊரான கோகுலத்துக்கு ( விரஜ பூமிக்கு) வந்தார். இவளின் அழகிய தோற்றத்தைக் கண்ட கோபர்கள்லக்ஷ்மி தெய்வத்தின் வெளிப்பாடாக தவறாகப் புரிந்துகொண்டனர். அவரது அழகைக் கண்டு திகைத்துப்போன கிருஷ்ணாவின் வளர்ப்புத் தாய் யசோதா, கிருஷ்ணனை மடியில் ஏற்றிக்கொண்டு தாய்ப்பால் கொடுக்க பூதனையை அனுமதித்தார். கிருஷ்ணரைக் கொல்ல பூதனை தனது மார்பகத்தில் ஒரு மந்தனா என்ற போதைப்பொருளால் பூசினாள் . இருப்பினும், கிருஷ்ணர் பூதனையின் மார்பகங்களை பாலுடன் சேர்த்து அவளது உயிரையும் ( பிராணன் ),உறிஞ்சி எடுத்தார்.
பூதனை, விஷ்ணுவின் அவதாரத்தை மனித வடிவத்தில் தனது அடுத்த பிறவியில் சந்திப்பார் என தனது முந்தைய பிறவியில் விஷ்ணுவிடமிருந்து ஆசீர்வாதம் பெற்றவர். ஆனால் அவள் அதை மறந்துவிட்டாள். உயிர் போகும் வேதனையில் பூதனை கத்தினாள், தன்னை விடுவிக்குமாறு கெஞ்சினாள், ஆனால் அது வீணானது. கிருஷ்ணர் மேலும் அவளுடன் ஒட்டிக்கொண்டிருந்தார். அவள் ஊருக்கு வெளியே ஓடிவந்து கடைசியில் இறந்துவிடுகிறாள். பின்னர் அவர் தனது உண்மையான பேய் வடிவத்தை எடுத்துக் கொண்டார், மரங்களைப் பெயர்த்து மூன்று கவ்யூட்டி தூரத்திற்கு (ஒரு யூனிட் தூரத்திற்கு 12 மைல்களுக்கு சமமான) தூசுகளாக மாற்றினார் . [6] [7] விரஜ மக்கள் பூதனாவின் உடலை வெட்டி, அவரது எலும்புகளையும் கால்களையும் புதைத்து, சதை மற்றும் தோலை எரித்தனர். கிருஷ்ணருக்கு தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் பூதனை தனது அனைத்து பாவங்களையும் தூய்மைப்படுத்தியதால், தீப்பிழம்புகளிலிருந்து மணம் வீசும் புகை வெளியேறியது, மேலும் யசோதா பெற்ற அதே சொர்க்கத்தை அவள் அடைந்தாள். ஆகவே, யசோதாவைப் போலவே பூதனையும் கிருஷ்ணருக்கு தாய்ப்பால் கொடுத்ததால் வளர்ப்புத் தாயாகக் கருதப்படுகிறார். [8]
புராணத்தின் பிற்கால பதிப்புகளில், பூதனையின் மார்பில் உள்ள போதைப்பொருள் விஷத்தால் மாற்றப்படுகிறது அல்லது அவளின் பால் தானே விஷம் என்று கூறப்படுகிறது. [3] எல்லோரும் தூங்கும்போது, இரவில் கிருஷ்ணரை திருடியதாக கதையின் மற்றொரு பதிப்பு சித்தரிக்கிறது. [9]
கே.எம்.முன்ஷி தனது கிருஷ்ணாவதாரத் தொடரில் புராணத்தை முற்றிலும் மாறுபட்டதாகக் கொண்டிருந்தார். பூதனை தீய நோக்கங்களுடன் வந்திருந்தாலும், கிருஷ்ணாவைக் கண்டு மகிழ்ச்சியடைவதாகவும், அவளுடைய தாய்வழி உள்ளுணர்வு உயர்ந்து, "இந்த அழகான பையனை உங்கள் மார்பகத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்" என்று கூறுகிறாள். நீ ஒரு பொல்லாத, பரிதாபமான பெண். உங்கள் உடலையும் மனதையும் வெறித்தனமான மகிழ்ச்சியுடன் சிலிர்ப்பிக்கும் மகிழ்ச்சி, இதற்கு முன்பு நீங்கள் பார்த்ததில்லை. " என்று கூறுகிறது. பூதனையும் மிகுந்த மகிழ்ச்சியடைந்து, விஷம் தடவிய தனது மார்பகங்களை மறந்து, கிருஷ்ணரை மடியில் எடுத்து அவனை பாலுறிஞ்சச் செய்தாள். இந்த செயல்பாட்டில், "என் அன்பான குழந்தையே! நான் உங்களுக்கு அனைத்தையும் தருகிறேன். நான் உன்னுடையவள். என்று கூறிக்கொண்டே அவர் கிருஷ்ணரிடம் சரணடைகிறார் " மேலும், பூதனை கிருஷ்ணர் பாலருந்தியதால் சுத்திகரிக்கப்பட்டு அவரது மரண உடலில் இருந்து விடுவிக்கப்படுகிறார். [10]
பிரம்மா வைவர்த்த புராணம்மும், கிரக சம்கிதையும் (கிருஷ்ணரின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு படைப்பு) பூதனையின் முந்தைய பிறப்பை, அரக்ககுல மன்னர் மகாபலி சக்கரவர்த்தியின் மகள் ரத்னமாலா என்று கூறுகின்றன. மேலும் கிருஷ்ணரின் முந்தைய அவதாரமான வாமனரை அவள் ஒரு சிறு உருவமாகப் பார்த்தபோது, அவனை தன் மகனாகக் கொண்டு பால் தரவேண்டும் என்ற ஆசையை அவள் உணர்ந்தாள். அவள் விரைவில் மனம் மாறி, மகாபலியின் அனைத்து உடைமைகளையும் வாமனர் வாங்கியபின், வாமனனைக் கொல்ல முடிவு செய்தாள். கிருஷ்ணர் அவளுடைய ஆசைகளை அறிந்திருந்தார். மேலும் - அவரை உறிஞ்சவும், அவரது உயிரை எடுக்க முயற்சிக்கவும், அவை இரண்டையும் நிறைவேற்ற அனுமதித்தார் [11]
பூதனை சிற்பத்திலும் புராணத்திலும் பறவையாக சித்தரிக்கப்படுகிறார். ஒரு பறவையாக பூதனையின் குசான் பேரரசு காலச் சிற்பஙக்ள் மதுரா, தியோகர் மற்றும் மந்தோரில் காணப்படுகின்றன . [4] ஹரிவம்சத்தின் மூன்றாம் நூற்றாண்டு பதிப்பில், பூதனை " கம்சனின் தாதி" என்று அழைக்கப்படுகிறார், கம்சன் குழந்தையாக இருந்தபோது சகுனி என்ற பெண் பறவையாக வருகிறார். மேலும் ஹரிவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பல பறவை போன்ற பெண் தெய்வங்களில் பூதனையும் ஒன்றாகும். [12] பூதனையின் பறவை வடிவம் பொருள்முதல்வாத நோக்கங்களின் விருப்பத்தை குறிக்கிறது. [11] சில நூல்களில், பூதனை ஒரு வாகி, ஒரு பெண் கொக்கு என்று விவரிக்கப்படுகிறார், இதனால் வக்கிரம் மற்றும் பாசாங்குத்தனத்தின் சின்னமாக இருக்கிறார்.[13]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.