மகாஜனபாதங்கள்
இந்தியத் துணைக் கண்ட இராச்சியங்கள் (அண். கி. மு. 600 - அண். கி. மு. 300) / From Wikipedia, the free encyclopedia
மகாஜனபாதங்கள் (Mahājanapadas, சமக்கிருதம்: பெரும் நாடுகள், மகா, "பெரும்", மற்றும் ஜனபாதங்கள் "மக்களின் காலடி ஆதாரம்") என்பவை பண்டைக்கால இந்தியாவில் நிலைத்திருந்த 16 இராச்சியங்கள் அல்லது சிலவர் ஆட்சிக் குடியரசுகள் ஆகும். இவை இரண்டாம் நகரமயமாக்கல் காலத்தின் போது கி. மு. 6ஆம் நூற்றாண்டு முதல் கி. மு. 4ஆம் நூற்றாண்டு வரை நிலைத்திருந்தன.[3]
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
மகாஜனபாதங்கள் | |||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
அண். கி. மு. 600–அண். கி. மு. 345 | |||||||||||||||
தலைநகரம் | பல்வேறு | ||||||||||||||
பேசப்படும் மொழிகள் | பாளி, பிராகிருதங்கள் மற்றும் சமசுகிருதம் | ||||||||||||||
சமயம் | பண்டைக் கால இந்து சமயம் சமணம் (பௌத்தம் மற்றும் சைனம்) | ||||||||||||||
அரசாங்கம் | குடியரசுகள் (கணசங்கங்கள்) முடியாட்சி | ||||||||||||||
வரலாற்று சகாப்தம் | இரும்புக் காலம் | ||||||||||||||
• தொடக்கம் | அண். கி. மு. 600 | ||||||||||||||
• முடிவு | அண். கி. மு. 345 | ||||||||||||||
|
கி. மு. 6 முதல் 5ஆம் நூற்றாண்டு வரையிலான காலமானது ஆரம்ப கால இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்பு முனையாகப் பெரும்பாலும் கருதப்படுகிறது. சிந்துவெளி நாகரிகத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு இக்காலத்தின் போது இந்தியாவின் முதல் பெரும் நகரங்கள் தோன்றின. சமண இயக்கங்களின் (பௌத்தம் மற்றும் சைனம் உள்ளிட்ட) வளர்ச்சியின் காலமாகவும் இது திகழ்ந்தது. வேத காலத்தின் சமய மரபு சார் கொள்கைகளுக்கு இவை சவால் விடுத்தன.
மகாஜனபாதங்களில் இரண்டு பெரும்பாலும் கனசங்கங்களாகவும் (சிலவர் ஆட்சிக் குடியரசுகள்) மற்றும் பிற முடியரசு அமைப்புகளையும் கொண்டிருந்தன. அங்குத்தர நிகயா[4] போன்ற பண்டைக்கால பௌத்த நூல்கள் வடமேற்கே காந்தாரம் முதல் இந்தியத் துணைக் கண்டத்தின் கிழக்குப் பகுதியில் அங்கம் வரையிலான ஒரு பட்டை போன்ற வழியில் வளர்ந்து செழித்திருந்த 16 பெரும் இராச்சியங்கள் மற்றும் குடியரசுகளைப் பற்றி அடிக்கடி குறிப்பிடுகின்றன. அவை விந்திய மலைப் பகுதிக்குத்[5] தெற்கே இருந்த பகுதிகளையும் உள்ளடக்கி இருந்தன. இவை அனைத்துமே இந்தியாவில் பௌத்த மதம் தோன்றுவதற்கு முன்னரே வளர்ச்சி அடைந்திருந்தன.[6]
தொல்லியல் ரீதியாக, வடக்கின் மெருகூட்டப்பட்டக் கருப்பு மட்பாண்டப் பண்பாட்டின் பங்காக இக்காலம் தொடர்புடையதாக அடையாளப்படுத்தப்படுகிறது.[7]