முகலிந்தா
பாம்பு போன்ற உயிரினம், கௌதம புத்தரை உடனிருந்து பாதுகாத்தது / From Wikipedia, the free encyclopedia
முக்கலிந்தா (Mucalinda), முச்சலிந்தா அல்லது முசிலிந்தா என்பது நாகம் ஒன்றின் பெயர். இது பாம்பு போன்ற உயிரினம் ஆகும். இது ஞானமடைந்த பிறகு கௌதம புத்தரை உடனிருந்து பாதுகாத்தது.[2]
கௌதம புத்தர் போதி மரத்தின் கீழ் தியானம் செய்யத் தொடங்கிய ஆறு வாரங்களுக்குப் பிறகு, வானம் ஏழு நாட்களுக்கு இருளடைந்தது. மேலும் அற்புதமான மழையும் பெய்தது என்று கூறப்படுகிறது. இருப்பினும், பாம்புகளின் வலிமைமிக்க மன்னன், முகலிந்தா, பூமிக்கு அடியிலிருந்து வந்து, அனைத்து பாதுகாப்பிற்கும் ஆதாரமாகத் தனது தலைமூடி மூலம் புத்தரைப் பாதுகாத்து. பெரும் புயல் நீங்கியதும், பாம்பு மன்னன் மனித உருவம் எடுத்து, புத்தரை வணங்கி, மகிழ்ச்சியுடன் அரண்மனைக்குத் திரும்பினார்.