அசோக்நகர் மாவட்டம்

மத்தியப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

அசோக்நகர் மாவட்டம் (Ashoknagar, இந்தி:अशोकनगर जिला) மாவட்டம் இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்திலுள்ள மாவட்டங்களுள் ஒன்று ஆகும்.[1] இம்மாவட்டத்தின் தலைநகரம் அசோக்நகர் ஆகும். இம்மாவட்டமானது 2003 ஆம் வருடம் ஆகத்து மாதம் 15 ஆம் தியதி குனா மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது.

விரைவான உண்மைகள் மாநிலம், நிர்வாக பிரிவுகள் ...

இம்மாவட்டம் புந்தேல்கண்ட் புவியியல் பகுதியில் அமைந்துள்ளது

Remove ads

அமைப்பு

இம்மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 4773.94 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இம்மாவட்டத்தின் மேற்கே சிந்து நதியும், கிழக்கே பேட்வா ஆறும் ஓடுகிறது.

மக்கள் தொகை

2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 6,88,920 ஆகும்.

வரலாறு

இம்மாவட்டமானது 2003 ஆம் வருடம் ஆகத்து மாதம் 15 ஆம் தியதி குணா மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது. பண்டையக் காலத்தில் இப்பகுதியானது சிந்தியா குடும்பத்தினரால் ஆளப்பட்டது. இது குவாலியர் பகுதிக்கு உட்பட்டிருந்தது. அசோகர் உஜ்ஜயினி வெற்றிக்குப் பிறகு இரவு இங்கே தங்கியதால் இவ்விடத்திற்கு அசோக்நகர் எனப் பெயர் வந்தது.

காலநிலை

இம்மாவட்டத்தின் சராசரி வெப்பநிலை கோடைக்காலத்தில் 47 டிகிரி செல்சியசாகவும் குளிர்காலத்தில் 4 டிகிரி செல்சியசாகவும் இருக்கும்.

உட்பிரிவுகள்

இந்த மாவட்டத்தை வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[1] அவை அசோக்நகர், சன்தேரி, முங்காவ்லி, இசாகட் ஆகியன.

இந்த மாவட்டம் மத்தியப் பிரதேச சட்டமன்றத்துக்கு மூன்று தொகுதிகளின் மூலம் முன்னிறுத்தப்படுகிறது.[1]

  • அசோக்நகர்
  • சந்தேரி
  • முங்காவ்லி

இதனையும் காண்க்

சான்றுகள்

Loading content...

இணைப்புகள்

Loading content...
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads