அபபிரம்சம்

6 முதல் 13 ஆம் நூற்றாண்டுகளுக்கு முந்தைய நவீன இந்தியாவின் இடைநிலை பேச்சுவழக்கு தொடர்ச்சி From Wikipedia, the free encyclopedia

அபபிரம்சம்
Remove ads

அபபிரம்சம் ( Apabhraṃśa ) என்பது பண்டைய இந்தியாவில் பரவலாக இருந்த சமசுகிருதம் அல்லாத மொழிக்கு அபபிரம்சம் என்று பெயர். நவீன மொழிகளின் எழுச்சிக்கு முன்னர் வட இந்தியாவில் பேசப்பட்ட மொழிகளைக் குறிக்க பதஞ்சலி எழுதிய வியாகரணத்தில் (பூர்வீக இலக்கண விதி) இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தியவியலில், இது 6 ஆம் மற்றும் 13 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இடைப்பட்ட மத்திய மற்றும் ஆரம்பகால நவீன இந்தோ-ஆரிய மொழிகளுக்கு இடையே மாற்றத்தை உருவாக்கும் பேச்சுவழக்குகளுக்கு ஒரு குடைச் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது.[1] இருப்பினும், இந்த பேச்சுவழக்குகள் மத்திய இந்தோ-ஆரிய காலத்தில் வழக்கமாக சேர்க்கப்பட்டுள்ளன.[2]:p.42 சமசுகிருதத்தில் அபபிரம்சம் என்றால் "கெட்ட" அல்லது "இலக்கணமற்ற மொழி" என்று பொருள்படும், இது சமஸ்கிருத இலக்கணத்தின் விதிமுறையிலிருந்து விலகுகிறது. இது அமரகோசத்தில் பாசப்தா என்று கூறப்படுகிறது. கூர்ஜர (நவீன குசராத்து ) பகுதியின் தென்கிழக்கே உள்ள அபிரா பகுதியில் உள்ள பல்வேறு மக்களால் பேசப்படும் பழமையான மொழி அபபிரம்சம் என்று சில வரலாற்றுப் படைப்புகளிலிருந்து ஊகிக்க முடியும்.

விரைவான உண்மைகள் அபபிரம்சம், நாடு(கள்) ...

12ஆம் நூற்றாண்டு முதல் 16ஆம் நூற்றாண்டு வரையிலான வட இந்தியாவின் வரலாற்றுக்கு அபபிரம்ச இலக்கியம் ஒரு மதிப்புமிக்க ஆதாரமாக உள்ளது.[3]

Remove ads

பின்னணி

பழங்காலத்தில் அபபிரம்ச ஒலிக்கு ஏதேனும் சிறப்புப் பொருள் இருந்திருக்க வேண்டும். காலப்போக்கில் அது தனி மொழியின் பெயராக மாறியது. கி.மு. 2 ஆம் நூற்றாண்டில் பதஞ்சலி எழுதிய மகாபாஷ்யத்தில், வடமொழி வடிவங்களாக மாற்றப்பட்ட சமசுகிருத சொற்களுக்கு அபபிரம்சா என்று பெயரிடப்பட்டது என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. கௌஹ் என்ற சமசுகிருதச் சொல்லுக்கு இணையான சொற்களாக வடமொழியில் பயன்படுத்தப்படும் கவி, கோனி, கோதா மற்றும் கோபோதலிகா ஆகியவை அபப்ரம்ச ஒலிகள் என்று பதஞ்சலி பரிந்துரைக்கிறார்.

சமண நூலகங்களில் குறிப்பிடத்தக்க அளவு அபபிரம்ச இலக்கியங்கள் காணப்படுகின்றன. அமீர் குஸ்ராவ் மற்றும் கபீரும் முறையே நவீன உருது மற்றும் இந்தி மொழிகளைப் போலவே ஒரு மொழியில் எழுதுகையில், பல கவிஞர்கள், குறிப்பாக இந்து மன்னர்களால் இன்னும் ஆளப்பட்ட பிராந்தியங்களில், சரகா, திலோபா , காமரூபத்தின் கன்கா தாரின் தேவசேனன் (9 ஆம் நூற்றாண்டு ) மல்கெடாவின் புஷ்பதந்தர் (9 ஆம் ஆண்டு ) தனபால் முனி ராம்சிம்மா, ஹேமச்சந்திரன் மற்றும் குவாலியரின் இராய்து (15 ஆம் நூற்றாண்டு ) போன்ற எழுத்தாளர்கள் அபபிரம்சத்தில் தொடர்ந்து எழுதினர்.

காளிதாசனின் விக்ரமோரவாசியம் அபபிரம்சத்தின் பயன்பாட்டிற்கு ஒரு ஆரம்ப எடுத்துக்காட்டாகும். புரூரவன் காட்டில் உள்ள விலங்குகளிடம் காணாமல் போன தனது காதலியைப் பற்றி கேட்கும் பாடல் அபபிரம்சத்தில் உள்ள பாடல்கள் 18 ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்தன. அப்போது பாகவதிதாசர் மிகங்கலேகா சாரியு எழுதினார்.[3]

ஒரு முஸ்லிம் எழுதிய அபபிரம்ச படைப்புகளுக்கு முதல் அறியப்பட்ட எடுத்துக்காட்டு முல்தானின் அப்துர் ரகுமானின் சந்தேசரசகா என்பதாகும். இது கிபி 1000இல் எழுதப்பட்டிருக்கலாம்.[4]

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads