அஸ்வகோசர்

2ஆம் நூற்றாண்டு பௌத்தக் கவி From Wikipedia, the free encyclopedia

அஸ்வகோசர்
Remove ads

அஸ்வகோசர் (Aśvaghoṣa) (தேவநாகரி: अश्वघोष) (கி பி 80 – 150)வட இந்தியாவின் சாகேதம் எனும் ஊரில், அந்தண குலத்தில் பிறந்த இந்தியத் தத்துவவாதியும், சமசுகிருத கவிஞரும், தருக்கவாதியும் ஆவார்.[1] இந்துவாகப் பிறந்து பின்னர் பௌத்த பிக்குவாக மாறியவர். குசானப் பேரரசர் கனிஷ்கரின் அரசவையில் அஷ்வகோசர் பௌத்த ஆன்மீகத் தலைவராக இருந்தவர்.[2]அஸ்வகோசர் மகாயான பௌத்தத்தை வளர்த்தவர்.

விரைவான உண்மைகள் அஸ்வகோசர், தொழில் ...

காளிதாசருக்கு முன்னர் சமசுகிருத மொழியின் முதல் நாடக ஆசிரியரும், மகா கவி எனப் போற்றப்படுபவர் அஷ்வகோசர் ஆகும். பௌத்த எழுத்தாளரான அஸ்வகோசரின் இலக்கியப் படைப்புகள் புத்தசரிதம், சௌந்தரானந்தா மற்றும் சூத்திர அலங்காரம் ஆகும்.[3] அஸ்வகோசர் காலத்திற்கு முன்னர் கலப்பட சமசுகிருத மொழியில் இருந்த பௌத்த இலக்கியங்களை, பௌத்த சமயத்திற்கு மாறிய அஸ்வகோசர், செம்மைப்படுத்தப்பட்ட சமசுகிருத மொழியில் மொழிபெயர்த்து எழுதினார்.[4]

Remove ads

பெயர்க்காரணம்

அஸ்வம் + கோஷம் = அஸ்வகோஷர் எனும் சமசுகிருத மொழிச் சொல்லிற்கு குதிரையின் சப்தம் என்று பொருளாகும்.

துறவு வாழ்க்கை

அஸ்வகோச சரித்தரம் எனும் நூலில் கூறியவாறு,[5][6], சமணர்களையும், பௌத்தர்களையும் தருக்கத்தில் வென்று விரட்டிய அஸ்வகோசருக்கு, பார்ஸ்வா எனும் பௌத்த ஞானி அஸ்வகோசருக்கு பௌத்த தத்துவங்களை உபதேசித்தார். பின்னர் பௌத்த சமயத்திற்கு மாறிய அஸ்வகோசர் வட இந்தியா முழுவதும் சுற்றிச் வந்து மகாயான பௌத்ததை வட இந்தியாவில் பரப்பியவர். .

படைப்புகள்

  • அஸ்வகோசரின் படைப்புகளில் மிகவும் சிறந்த புத்தசரிதம் எனும் நூல், சமசுகிருத மொழியில் எழுதப்பட்ட காவியக் கவிதைத் தொகுப்பாகும்.[7][8]
  • இவரது மற்றொரு படைப்பான சௌந்தரானாந்தா எனும் காவியக் கவிதை நூல், புத்தரின் ஒன்று விட்ட சகோதரனான நந்தன் என்பவன் பௌத்த பிக்குவாக மாறி விடுதலை அடைந்த வரலாற்றை விளக்குகிறது.[9][10]
  • மகா அலங்காரம் (Mahalankara) எனும் நூலின் ஆசிரியராக அஸ்வகோசர் கருதப்படுகிறார்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

ஆதார நூற்பட்டியல்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads