அ. கணேசமூர்த்தி
மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
அ. கணேசமூர்த்தி (A. Ganeshamurthi, 10 சூன் 1947-28 மார்ச்சு 2024) ஒரு தமிழகத்தைச் சேர்ந்த அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். மறுமலர்ச்சி திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர் அக்கட்சியின் பொருளாளராக பதவி வகித்தார். 1978-இல் திமுக மாணவரணி பொறுப்பில் இருந்த இவர் பின்னர் ஒருங்கிணைந்த பெரியார் (ஈரோடு) மாவட்ட திமுக செயலாளராக பொறுப்பு வகித்தார். 1993-இல் திமுகவிலிருந்து வைகோ வெளியேற்றப்பட்ட போது அவருக்கு ஆதரவு தெரிவித்து வெளியேறிய ஒன்பது மாவட்ட செயலாளர்களில் கணேசமூர்த்தியும் ஒருவர். மறுமலர்ச்சி திமுக தொடங்கியதிலிருந்து ஈரோடு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்த இவர் 2016 ஆம் ஆண்டு மறுமலர்ச்சி திமுக பொருளாளராக ஆனார். இவர் 1998 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் பழனி தொகுதியில் போட்டியிட்டு வென்றார். பின்னர் 2009, 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், ஈரோடு தொகுதியிலிருந்து ம.தி.மு.க சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] இவர் 2009 பொதுத் தேர்தலில் மதிமுக சார்பாக வென்ற ஒரே வேட்பாளரும் இவரே.[3]
Remove ads
போட்டியிட்ட தேர்தல்களும் முடிவுகளும்
மொத்தம் 25 பேர் தேர்தலில் போட்டியிட்ட 15வது ஈரோடு மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில், காங்கிரசு கட்சியை சார்ந்த ஈ.வே.கி.ச. இளங்கோவனை 49,336 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்து, ஈரோடு மக்களவைத் தொகுதியின் முதல் உறுப்பினராக தேர்வுபெற்றார்.
பின்னர் 2019 ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், ஈரோடு தொகுதியிலிருந்து, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும், திமுக சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4]
Remove ads
இறப்பு
உடல் நலக்குறைவினால் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த அ. கணேசமூர்த்தி சிகிச்சைப் பலனின்றி 28 மார்ச்சு 2024 அன்று அதிகாலை உயிரிழந்தார்.[5]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads