ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயில்

தமிழ்நாட்டிலுள்ள நவக்கிரக ஆலயம் From Wikipedia, the free encyclopedia

ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயில்
Remove ads

ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயில் (இரும்பூளை) (Apatsahayesvarar Temple, Alangudi) என்பது திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டத்தில் அமைந்துள்ள சம்பந்தர் பாடல் பெற்ற தலமாகும்.[1] தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் இது 98ஆவது சிவத்தலமாகும்.

விரைவான உண்மைகள் தேவாரம் பாடல் பெற்ற திரு இரும்பூளை ஆபத்சகாயேசுவரர் திருக்கோயில், புவியியல் ஆள்கூற்று: ...
Remove ads

அமைவிடம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 70 மீட்டர் உயரத்தில், 10.8299°N 79.4105°E / 10.8299; 79.4105 என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, இக்கோயில் அமையப் பெற்றுள்ளது.[2]

சிறப்பு

Thumb
முன் மண்டபம்

இத்தலத்தில் ஆலகால நஞ்சை உண்டு தேவர்களை இறைவன் காத்தான் என்பது தொன்நம்பிக்கை. இத்தலம் குருஸ்தலமாக போற்றப்படுகிறது. இவ்வாலயத்தில் எழுந்தருளியுள்ள தட்சிணாமூர்த்திக்கு குருபெயர்ச்சியன்று சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் செய்யப்படுகின்றன. இந்தியா முழுவதிலும் இருந்து பக்தர்கள் குருபெயர்ச்சியன்றும் வியாழக்கிழமைகள் தோறும் ஆலங்குடி வந்து அருள்மிகு தெக்ஷிணாமூர்த்தியை தரிசனம் செய்து செல்கிறார்கள். மாசி மாதம் மூன்றாவது வியாழக்கிழமை மகாகுருவாரமாகக் கொண்டாடப்படுகிறது.

Remove ads

தலவரலாறு

  • அம்பிகை தவம் புரிந்து சிவபெருமானை திருமணம் புரிந்த திருத்தலம்
  • தட்சிணாமூர்த்தித் தலம்.

வழிபட்டோர்

விசுவாமித்திரர், முசுகுந்த சக்கரவர்த்தி, வீரபத்திரர் முதலானோர் வழிபட்ட திருத்தலம்.[3]

பரிவாரத் தலம்

பரிவாரத்தலங்களும் கடவுள்களும்

  • திருவலஞ்சுழி : விநாயகர்
  • சுவாமி மலை : முருகர்
  • திருவாவடுதுறை : நந்திதேவர்
  • சூரியனார் கோயில் : நவக்கிரகம்
  • தில்லை : நடராஜர்
  • திருவாரூர் : சோமஸ்கந்தர்
  • சீர்காழி : பைரவர்
  • திரு ஆப்பாடி : சண்டேசுவரர்
  • ஆலங்குடி : தட்சிணாமூர்த்தி

தட்சிணாமூர்த்தி தனிமூலவர்

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads