இந்திய நினைவு நாணயங்கள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்திய நினைவு நாணயங்கள் (ஆங்கிலம்: Commemorative coins of India) என்பது சில குறிப்பிட்ட நிகழ்வுகள் அல்லது முக்கிய நபர்களின் நினைவாக இந்திய ரிசர்வ் வங்கியால் வழங்கப்படும் நாணயங்கள் ஆகும். இந்திய நினைவு நாணயங்கள் 1964 ஆம் ஆண்டில் ஜவகர்லால் நேருவின் படத்துடன் ஒரு ரூபாய் மற்றும் ஐம்பது பைசா நாணயங்கள் வெளியாயின. இதுவே முதலாவது இந்திய நினைவு நாணயமாகும். இத்தகைய நாணயங்கள் ஒரு தனித்துவமான வடிவமைப்பிலோ அல்லது வழக்கமான வடிவமைப்பிலோ வெளியிடப்படுகின்றன. முக்கியமான நிகழ்வுகள் அல்லது முக்கிய நபர்களை பெருமைப்படுத்தும் விதமாக வழங்கப்படும் இவை இந்திய சுதந்திர போராட்டம், போர், சமாதானம், வனவிலங்குகள், தாவரங்கள், முக்கிய நபர்கள், முக்கிய நிகழ்வுகள் மற்றும் முக்கிய நிறுவனங்களின் நினைவாக வழங்கப்படுகின்றன. இந்நாணயங்கள், 5, 10, 20, 25, 50 பைசாக்களிலும், 1, 2, 5, 10, 50, 75, 100, 125, 1000 உள்ளிட்ட பல்வேறு விதமான ரூபாய் மதிப்புகளிலும் வெளியிடப்படுகின்றன. இவற்றுள் அதிகபட்சமாக ₹1000 மதிப்புடைய நாணயம் தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில் கட்டி 1000 ஆண்டுகள் கடந்ததை நினைவுப்படுத்தும் விதமாக வெளியிடப்பட்டது.[1]
Remove ads
முதலாவது நினைவு நாணயம்
விடுதலை இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் இறப்புக்குப் பிறகு அவரது தியாகத்தை போற்றும் விதமாக, நேருவின் படத்துடன் ஒரு ரூபாய் மற்றும் ஐம்பது பைசா நாணயங்கள் 1964ஆவது ஆண்டில் வெளியாயின. ஒரு ரூபாய் நாணயத்தில் நேருவின் படத்துடன் "ஜவகர்லால் நேரு" என ஆங்கிலத்தில் எழுதப்பட்டு வெளியானது. ஐம்பது பைசா நாணயத்தில் நேருவின் படத்துடன், பாதி நாணயங்களில் "ஜவகர்லால் நேரு" என ஆங்கிலத்திலும் மீதி நாணயங்களில் இந்தியிலும் எழுதப்பட்டு வெளியானது. இதுவே இந்தியா விடுதலை பெற்ற பின்னர் வெளியான முதலாவது நினைவு நாணயமாகும்.
Remove ads
தமிழகம் தொடர்புடைய நாணயங்கள்
இந்தியாவில், தமிழகம் தொடர்புடைய நான்கு நாணயங்கள் இதுநாள் வரையிலும் வெளிவந்திருக்கின்றன. 1995ஆவது ஆண்டில் எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டின் நினைவாக திருவள்ளுவர் படத்துடன் வெளியானது. அதனைத் தொடர்ந்து 2004ஆவது ஆண்டில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரின் புகைப்படத்துடன் ஐந்து ரூபாய் நாணயங்கள் வெளியாயின.[2] மேலும் 2009ஆவது ஆண்டில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அண்ணாவின் படமும், அவரது தமிழ் கையெழுத்தும் பதிந்த நாணயங்கள் வெளியாயின.[3] தஞ்சை பிரகதீசுவரர் கோயிலின் 1000ஆவது ஆண்டு விழாவையொட்டி அக்கோயிலின் உருவம் பதித்த ஐந்து மற்றும் 1000 ரூபாய் நாணயங்கள் 2010ஆவது ஆண்டில் வெளியாயின.[4]
Remove ads
வெளியான நினைவு நாணயங்கள்
1960 களில்
1964 ஜவகர்லால்நேரு
1969 மகாத்மாகாந்தி
1970 களில்
1970 அனைவருக்கும் உணவு (முதல் வெளியீடு)
1971 அனைவருக்கும் உணவு (இரண்டாவது வெளியீடு)
1972 சுதந்திர தின வெள்ளி விழா ஆண்டு
1973 அதிகமான உணவுஉற்பத்தி
1974 திட்டமிடப்பட்டகுடும்பம்
1975 மகளிர் ஆண்டு
1976 அனைவருக்கும் உணவு மற்றும் வேலைவாய்ப்பு
1977 வளர்ச்சி சேமிப்பு
1978 அனைவருக்கும் உணவு மற்றும் தங்குமிடம்
1979 குழந்தைகள் ஆண்டு
1980களில்
1982 தேசிய ஒருமைப்பாடு
1982 ஒன்பதாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
1985 இந்திராகாந்தி
1989 ஜவகர்லால்நேரு
1990களில்
1993 சிறியகுடும்பம் மகிழ்ச்சியானகுடும்பம்
1995 உலகத்தமிழ் மாநாடு
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads