இரண்டாம் சூரியவர்மன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இரண்டாம் சூரியவர்மன் (Suryavarman II ([Khmer]) (இறப்புக்குப் பின்னர்: பரமவிஷ்ணுலோகன்) கெமர் பேரரசை கிபி 1113 முதல் கிபி 1150 வரை ஆண்ட பேரரசர்.[4] இவர் கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட் என்ற பெருமாள் கோயிலைக் கட்டியவர். இது உலகின் மிகப் பெரும் கோயிலாகக் கருதப்படுகிறது. இவருடைய கட்டிடக் கலை, படையெடுப்புகள், சிறந்த அரசாங்கம் முதலியவற்றிற்காக இவரைக் கெமர் பேரரசின் சிறந்த அரசராக வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
இந்த மன்னன் ஆட்சியில் தலைநகராக அமைந்த இடம் யசோதரபுரம் ஆகும். மிக நீண்ட, பரந்த நிலப்பிரதேசம் இவன் ஆளுகையில் இருந்தது. வடக்கே சம்பா, கிழக்குக் கடற்பிரதேசம், மேற்கு பகோன் , பர்மா, தெற்கு மலாய் தீபகற்பம் ஆகியவற்றைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்திருக்கின்றான். இறந்த பின் பரமவிஷ்ணுலோகன் என்று பெயர் சூட்டப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டிருக்கின்றான்.
Remove ads
உசாத்துணைகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads