இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர்

From Wikipedia, the free encyclopedia

இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர்
Remove ads

இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் கி.பி. 705 முதல் 745 வரை தஞ்சாவூரை ஆட்சி செய்த முத்தரைய அரச குலத்தைச் சேர்ந்த அரசர் ஆவார்.[1] இவர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், சுவரன் மாறன், குவாவன் மாறன் என்றும் அறியப்படுகிறார். தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய நிலப்பரப்புகளை ஆண்டார்.[2][3] நந்திவர்மனின் முடிசூட்டு விழாவில் இவர் கலந்து கொண்டார்.[4] 1996-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் சார்பில் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா, திருச்சி நகரில் இவரது சிலையை நிறுவினார்.[5] பிறகு 2002-ஆம் ஆண்டிலிருந்து, இவரது பிறந்தநாள் ஒரு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது[6].

விரைவான உண்மைகள் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர், ஆட்சிக்காலம் ...
Remove ads

வாழ்க்கை

இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் கி. பி. 675-ஆம் ஆண்டு மே 23ஆம் நாள் பிறந்தார்.[7] இவரது தந்தை மாறன் பரமேசுவரன் என்கிற இளங்கோவதிராயர். கி. பி. 705-ஆம் ஆண்டில் தனது தந்தையின் பின் அரியணை ஏறினார். நந்திவர்ம பல்லவனுடன் சேர்ந்து பாண்டிய, சேர படைகளை எதிர்த்துப் பன்னிரண்டு போர்களில் போரிட்டுள்ளார்.[8] நாலடியார் நூலில் இவரது மரபு வழி குறிப்பிடப்படுகிறது.[9][10] இவர் தமிழ்ப் புலவர்கள் பலரை ஆதரித்துத் தமிழ் வளர்ச்சிக்கு வித்திட்டவர். இவரைப் புகழ்ந்து பாச்சில் வேள் நம்பன், ஆசாரியர் அநிருத்தர், கோட்டாற்று இளம்பெருமானார், குவாவங் காஞ்சன் என்போர் வெண்பாக்கள் பாடியுள்ளனர். அவை செந்தலையில் உள்ள சிவன்கோயில் கல்வெட்டுகளில் காண்கின்றன.[11]

Remove ads

போரில் எதிரிகளை வென்ற பன்னிரண்டு இடங்கள்[12]

  1. கொடும்பாளுர்
  2. மணலூர்
  3. திங்களூர்
  4. காந்தலூர்
  5. அழுந்தியூர்
  6. காரை
  7. மரங்கூர்
  8. புகழி
  9. அண்ணல்வாயில்
  10. செம்பொன்மாரி
  11. வெண்கோடல்
  12. கண்ணனூர்

சிறப்புப்பெயர்கள்

  1. ஸ்ரீ சத்ரு மல்லன்
  2.  ஸ்ரீ கள்வர் கள்வன்
  3. ஸ்ரீ அதிசாகசன் 
  4. ஸ்ரீ மாறன் 
  5. அபிமான தீரன் 
  6. சத்ரு கேசரி
  7. தமராலயன்
  8. செரு மாறன் 
  9. வேல் மாறன் 
  10. சாத்தன் மாறன் 
  11. தஞ்சைக் கோன்
  12. வல்லக் கோன் 
  13. வான் மாறன்[13]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads