இராணி சிறீகுமார்

தமிழக அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

மருத்துவர் இராணி ஸ்ரீகுமார் (Rani Srikumar) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியாவார். இவர் 2024 இந்திய பொதுத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழ்நாட்டின் தென்காசி மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கபட்டார்.[1][2][3] சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதியில் இருமுறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த பி. துரைராஜ் இராணி சிறீகுமாரின் பெரியப்பா ஆவார்.

விரைவான உண்மைகள் இராணி சிறீகுமார், நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை ...
Remove ads

வாழ்க்கை

இராணி சிறீகுமார் தமிழ்நாட்டின், தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலைச் சேர்ந்தவர். எழுத்தரான சிவகுமாருக்கும், ஆசிரியையான செல்வமணிக்கும் மகளாகப் பிறந்தார். அடிப்படையில் மருத்துவரான இராணி சிறீகுமார் மயக்கவியல் நிபுணர் ஆவார். அரசு மருத்துவமனையில் பணிபுரிந்துள்ளார். இராணி சிறீகுமாரின் கணவர் சிறீகுமார் என்பவராவார். சிறீகுமார் அரசு ஒப்பந்ததாரராகவும், திமுக விவசாய அணி துணை அமைப்பாளராக இருந்துவருகிறார்.[4]

Remove ads

அரசியல்

இராணி சிறீகுமார் 2002 முதல் திமுகவில் செயல்பட்டு வருகிறார். 2024 இந்திய பொதுத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தென்காசி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads