இஷ்டகா மடம், கும்பகோணம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இஷ்டகா மடம் கும்பகோணத்தில் இருந்த மடங்களில் ஒன்றாக குறிப்பிடப்படுகிறது. ஆனால் இம் மடம் இருந்ததற்கான சான்றுகள் தற்போது கும்பகோணத்தில் எங்கும் காணப்பெறவில்லை.
இருப்பிடம்
தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள மடங்களில் ஒன்றாக இஷ்டகா மடம் குறிப்பிடப்பட்டுள்ளது.
15ஆம் நூற்றாண்டு
இந்த மடம் கும்பகோணத்தில் கி.பி.15ஆம் நூற்றாண்டில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இம்மடத்தைச் சேர்ந்த ஸ்ரீபுருஷோத்தமபாரதி ஸ்ரீபாதங்கள் என்பவர் நன்னிலம் வட்டம் கூத்தாநல்லூரில் உள்ள சரசுவதி தேவிக்குக் கொடையளித்துள்ளார்.[1] கூத்தாநல்லூர் என்று தற்போது அழைக்கப்படும் இக்கூத்தனூரே ஒட்டக்கூத்தர் ஊர் என்ற ஒரு கருத்தும் உண்டு.
தற்போதைய நிலை
கும்பகோணத்தில் சங்கர மடம், மௌனசுவாமி மடம்,வீர சைவ மடம் மற்றும் விஜேந்திரசுவாமி மடம் ஆகிய மடங்கள் தற்போது உள்ளன. இஷ்டகா மடம் இருந்ததற்கான சான்று தற்போது கும்பகோணத்தில் எங்கும் காணப்பெறவில்லை.
மேற்கோள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads