உப்பிடமங்கலம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
உப்பிடிமங்கலம் (ஆங்கிலம்:Uppidamangalam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கரூர் மாவட்டம், கரூர் வட்டத்தில் இருக்கும் ஒரு முதல்நிலை பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சி முப்பது குக்கிராமங்களை கொண்ட விவசாய பகுதியாக உள்ளது. மேலும் இப்பேரூராட்சியில் வாரம் ஒரு முறை கூடும் மாட்டுச் சந்தை மிகவும் பிரபலமான ஒன்றாகும்.
Remove ads
அமைவிடம்
இப்பேரூராட்சி, கரூர் - மணப்பாறை செல்லும் நெடுஞ்சாலையில், கரூரிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
24.15 சகி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 72 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கிருஷ்ணராயபுரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,189 வீடுகளும், 11,292 மக்கள்தொகையும் கொண்டது.[4][5]
வெளி இணைப்புகள்
ஆதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads