ஊருக்கு உழைப்பவன்
எம். கிருஷ்ணன் நாயர் இயக்கத்தில் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஊருக்கு உழைப்பவன் (Oorukku Uzhaippavan) என்பது 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதை எம். கிருஷ்ணன் எழுதி இயக்கினார். வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், வாணிஸ்ரீ மற்றும் பலர் நடித்திருந்தனர். இது 1970 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான பாலு பெளகித்து படத்தின் மறு ஆக்கம் ஆகும்.[1] இப்படம் 12 நவம்பர் 1976 இல் வெளியிடப்பட்டது.[2][3]
Remove ads
கதை
இரகசிய உளவாளி செல்வம். சில காரணங்களினால் அவரைப் போன்ற தோற்றத்தில் இருக்கும் பணக்கார தொழிலதிபரான இராஜாவைப் போலவே நடிக்கிறார். இதனால் செல்வம் தன்வீட்டையும் இராஜாவின் வீட்டையும் கவனித்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு ஆளாகிறார். தன் சொந்த வாழ்க்கையை பணயம் வைத்து இராஜாவின் சிக்கல்களை செல்வம் எப்படி தீர்க்கிறார் என்பதே கதை.
நடிகர்கள்
- செல்வம் மற்றும் இராஜாவாக ம. கோ. இராமச்சந்திரன்
- மல்லிகாவாக வாணிஸ்ரீ
- காஞ்சனாவாக வெண்ணிற ஆடை நிர்மலா
- மல்லிகாவின் தாயாக எம். என். ராஜம்
- குமுதா மற்றும் ராதா என்ற ரீட்டாவாக குமாரி பத்மினி
- ராஜாவின் மகள் இராணியாக குழந்தை நட்ச்சத்திரம் ராஜகுமாரி
- செல்வத்தின் உதவியாளர் பாண்டுரங்கன் ஜேம்ஸ்பாண்ட்டாக தேங்காய் சீனிவாசன்
- காவல் ஆய்வாளராக வி. கோபாலகிருட்டிணன்
- நாகப்பனாக பி. எஸ். வீரப்பா
- மாலிகாவின் தந்தை ராஜவேலுவாக கே. கண்ணன்
- கூலியாளாக எம். பி. செட்டி
- குப்பத்துப் பெண்ணாக சண்முகசுந்தரி
- கரிகோல் ராஜு
Remove ads
தயாரிப்பு
ஊருக்கு உழைப்பவன் கர்நாடகத்தின் மைசூர், பெங்களூர் போன்ற இடங்களில் படமாக்கப்பட்டது.[4]
இசை
இப்படத்திற்கு ம. சு. விசுவநாதன் இசையமைத்தார்.[5]
Remove ads
வரவேற்பு =
கல்கியின் காந்தன் நடிகர்கள், பாடல்கள், ஒளிப்பதிவு ஆகியவற்றைப் பாராட்டினார்.[6]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads