எஸ். ஏ. சத்யா
தமிழக அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
எஸ். ஏ. சத்யா தமிழகத்தின் திமுகவைச் சேர்ந்த அரசியல்வாதியும், தமிழ்நாடு சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினருமாவார். இவர் 2019ல் நடந்த இடைத்தேர்தலில் ஓசூர் தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழகச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது ஒசூர் மாநகராட்சியின் முதல் மாநகரத் தந்தையாகப் பணியாற்றி வருகிறார்.[1][2][3]

வாழ்க்கை
கேரளத்தை பூர்வீகமாக கொண்ட இவர் கிருட்டிணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் பிறந்தவர். ஓசூர் ஆர். வி. அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்புவரை படித்துள்ளார். அதிமுகவில் இணைந்த இவர் 2001 முதல் 2006 வரை ஒசூர் நகராட்சியில் வார்டு உறுப்பினராக இருந்தார்.[4] பின்னர் 2006 ஆண்டு ஒசூர் நகராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட பிணக்கால் அதிமுகவில் இருந்து விலகி, திமுகவில் இணைந்தார். 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வியுற்றார். இந்திலையில் 2019 ஆண்டு நடந்த ஒசூர் சட்டமன்ற இடைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5] தற்போது இவர் ஒசூர் மாநகர திமுக செயலாளராக உள்ளார்.[6]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads