ஐஎன்எஸ் விக்ராந்த்
வானூர்தி தாங்கிக் கப்பல் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஐஎன்எஸ் விக்ராந்த் (INS Vikrant (IAC-I)) என்பது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதலாவது வானூர்தி தாங்கிக் கப்பல் ஆகும். இக்கப்பல் இந்தியக் கடற்படைக்காக கொச்சி கப்பல் கட்டுமானதளத்தில் நிர்மாணிக்கப்பட்டது. இக்கப்பலுக்கான வடிவமைப்பு பணிகள் 1999 ஆம் ஆண்டில் துவங்கின. இந்த கப்பலின் அடிப்பாகம் 2009 பெப்ரவரியில் அமைக்கப்பட்டது. இக்கப்பாலானது 2011 டிசம்பர் 29 இல் இது மிதக்கவிடப்பட்டு, 2013 ஆகத்து 12 இல் வெள்ளோட்டம் விடப்பட்டது.[2] ரூபாய் 20,000 கோடி செலவில் அதிநவீன முறையில் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட முதல் வானூர்தி தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி 2 செப்டம்பர் 2022 அன்று கொச்சியில் வைத்து இந்தியக் கடற்படைக்கு அர்ப்பணித்தார்.[3][4]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads