கண்ணூர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கண்ணூர் (ஆங்கிலம்: Kannur) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் அமைந்துள்ள கண்ணூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். மேலும் இது கண்ணூர் மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். இவ்வூரில் நடைபெறும் தெய்யாட்டம் மிகவும் புகழ்பெற்றது. இந்நகரில் இந்தியக் கைத்தறி தொழில்நுட்பக் கழகம் செயல்படுகிறது.
Remove ads
மக்கள் வகைப்பாடு
2001ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 63,795 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 48% ஆண்கள்; 52% பெண்கள் ஆவார்கள். கண்ணூர் மக்களின் சராசரி கல்வியறிவு 83% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 84%; பெண்களின் கல்வியறிவு 83% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விடக் கூடியதே. கண்ணூர் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
பார்க்கத் தகுந்த இடங்கள்
- முழப்பிலங்காடு கடற்கரை
- செயிண்ட் ஆஞ்சலோ கோட்டை
- பையம்பலம் கடற்கரை
- ஆரக்கல் அருங்காட்சியகம்
- கண்ணூர் கண்டோன்மென்ட்
- கண்ணூர் கலங்கரை விளக்கம்
- மீன்குண்ணு கடற்கரை
- மாப்பிள்ளா கடற்கரை.
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads