காசிவிசுவேசுவரர் கோயில், இலக்குண்டி

From Wikipedia, the free encyclopedia

காசிவிசுவேசுவரர் கோயில், இலக்குண்டிmap
Remove ads

காசிவிசுவேசுவரர் கோயில் (Kasivisvesvara temple) சில நேரங்களில் காசிவிசுவநாதர் கோயில் எனவும் அழைக்கப்படும் இது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் கதக் மாவட்டத்தின் இலக்குண்டியில் அமைந்துள்ளது. இது கதக் - பெட்டகேரி நகரத்திலிருந்து 11 கி.மீ தொலைவிலும், தம்பாலில் இருந்து 24 கி.மீ தொலைவிலும், குக்னுவிலிருந்து 50 கி.மீ தொலைவிலும் உள்ளது. [1]

Thumb
இலக்குண்டியில் உள்ள காசிவிசுவேசுவரர் கோயில் (11 ஆம் நூற்றாண்டு) சிவன் சன்னதி (இடது) மற்றும் சூரிய தேவன் சன்னதி (வலது)
Thumb
காசிவிசுவேசுவரர் கோயிலில் சன்னதி சுவரும் அதன் கட்டுமானமும்
Remove ads

கலாச்சாரம்

மேலை சாளுக்கிய சாம்ராச்சியத்தின் கலாச்சாரமும் கோயில் கட்டும் நடவடிக்கைகளின் மையமும் துங்கபத்திரை ஆற்றுப் பகுதியில் அமைந்திருந்தது. இங்கு பெரிய இடைக்கால பட்டறைகள் ஏராளமான நினைவுச்சின்னங்களை கட்டின. [2] இந்த நினைவுச்சின்னங்கள், முன்பே இருக்கும் திராவிடக் கோயில்களின் பிராந்திய வகைகள், கர்நாடா திராவிட பாரம்பரியத்தை வரையறுத்தன. [3] குறிப்பாக இலக்குந்தி மேலை சாளுக்கிய கட்டிடக்கலை முதிர்ச்சியடைந்த கட்டத்தின் இருப்பிடமாக இருந்தது. [4] காசிவிசுவேசுவரர் கோயில் இந்த சாதனைகளில் ஒரு உயர்ந்த புள்ளியைக் குறிக்கிறது. வரலாற்றாசிரியர் ஹென்றி கௌசன்ஸ் கருத்துப்படி, இது இந்தியாவின் கன்னட மொழி பேசும் பகுதியில் மிகவும் அலங்கரிக்கப்பட்ட கோயில்களில் ஒன்றாகும். [5]

Remove ads

அலங்காரங்கள்

கோவில் மண்டபத்தில் ஒரு தூண் மீது பொ.ச. 1087ஐச் சேர்ந்த கல்வெட்டு இருப்பதும், கோயிலின் அந்த பகுதியின் தெளிவும் அசல் கட்டுமானம் எளிமையாக இருந்திருக்கலாம் என்று கூறுகிறது. சாளுக்கிய பிரதேசத்தின் மீது சோழப் படையெடுப்புகளின் முடிவில், பிற்காலத்தில் கோயிலின் மற்ற பகுதிகளில் அலங்காரத்தின் பரவலானது சேர்க்கப்பட்டிருக்கலாம். [5] இலக்குந்தியில் உள்ள பெரும்பாலான கல்வெட்டுகள் பொ.ச. 1170 ஆம் ஆண்டிலிருந்து இருக்கிறது. போசள மன்னன் இரண்டாம் வீர வல்லாளன்தேவகிரியின் தேவகிரி யாதவப் பேரரசிலிருந்து இலக்குந்தியை (லோகிகுந்தி என்றும் அழைக்கப்படுகிறது) இணைத்து கி.பி 1193 இல் தனது தலைநகராக மாற்றினார். அவரது ஆட்சியின் போது கோவிலுக்கு அழகு கிடைத்திருக்கலாம். [6]

Thumb
காசிவிசுவேசுவரர் கோயிலின் தெற்கு வாசல் கதவின் வேலைப்பாடுகள்.
Remove ads

சன்னதி

கிழக்கு நோக்கி எதிர்கொள்ளும் இந்த ஆலயம் காசிவிசுவேசுவரருக்கு (இந்துக் கடவுள் சிவன் ) அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, அதன் உலகளாவிய சின்னமான இலிங்கம் கருவறையில் மூன்று அடி உயரத்தில் உள்ளது. பிரதான சன்னதியை எதிர்கொள்ளும் மற்ற சன்னதி சூரியக் கடவுளான சூரிய தேவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது சூரியநாராயணன் என்று அழைக்கப்படுகிறது. இந்த சன்னதி மேற்கு நோக்கி உள்ளது. சூரியக் கோயில்களில் ஒரு அசாதாரயே அமைந்திருக்கும். [7] இக்கோயில் சாளுக்கிய கலை சாதனைகளில் ஏற்பட்ட மாற்றத்தை எடுத்துக்காட்டுகிறது. முந்தைய கட்டுமானங்களில் காணப்படாத கூர்மையான மற்றும் மிருதுவான கல் வேலைகளை நோக்கி, ஒளி மற்றும் நிழலின் விளைவை முழுமையாகப் பயன்படுத்துகிறது. கோபுரத்தின் மீது கட்டுமானங்கள், வளைவுகள் மற்றும் பிற பணிகள், கதவுகளின் அலங்காரங்கள் குறித்தும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. [6]

Thumb
உள் மண்டபத்தில் செதுக்கப்பட்டு மெருகூட்டப்பட்டத் தூண்கள்
Thumb
கி.பி 1087 தேதியிட்ட ஆறாம் விக்ரமாதித்தனின் பழைய கன்னடக் கல்வெட்டு
Thumb
சிறு கோபுரத்துடன் கூடிய கீர்த்திமுகம் (பேய் முகம்) – சன்னதிக்கு மேலே செல்லும் அலங்கார வளைவு

மேற்கோள்கள்

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads