குந்தள நாடு

From Wikipedia, the free encyclopedia

குந்தள நாடு
Remove ads

குந்தள நாடு (Kuntala country) ஒரு பண்டைய இந்திய அரசியல் பிராந்தியமாகும். இது மேற்கு தக்காணமும் தெற்கு கர்நாடகாவின் சில பகுதிகளையும் உள்ளடக்கியது (முந்தைய வடக்கு மைசூர் ). கிமு 600-450 காலத்திய குந்தள நாணயங்கள் கிடைத்துள்ளன. [1] குந்தளா கி.பி 10 -12 ஆம் நூற்றாண்டுகளின் பிற்பகுதியில் தென்னிந்தியாவின் பிரிவுகளில் ஒன்றை உருவாக்கியது. (மற்ற பகுதிகள்: சோழர், சேரர், பாண்டியர், ஆந்திர நாடு ). ஒவ்வொன்றும் அதன் சொந்த கலாச்சாரத்தையும் நிர்வாகத்தையும் வளர்த்துக் கொண்டன. தலகுந்தா கல்வெட்டுகள் பல்லிகாவி மற்றும் அருகிலுள்ள பகுதிகளை குந்தளாவின் பகுதிகளாகக் குறிப்பிடுகின்றன. அனாவட்டிக்கு அருகிலுள்ள குபதுருவில் உள்ள கல்வெட்டுகள் குபதுருவை குவெட்டுகளில் சாளுக்கியக் காலத்தின் மூன்று பெரிய நாடுகளில் ஒன்றாக குந்தளா போற்றப்படுகிறது.

Thumb
குந்தள நாணயங்கள் கிமு 400-300
Remove ads

கல்வெட்டுகள்

தேவகிரியின் யாதவர்கள் வெளியிட்ட செப்புத் தகடுகள் நாகர்களை அதன் பழமையான ஆட்சியாளர்களாகக் குறிப்பிடுகின்றன. கல்வெட்டுகள் மற்றும் செப்புத் தகடுகளில் குறிப்பிட்டுள்ளபடி இராஷ்டிரகூடர்கள், சாதவாகனர்கள், வாகாடகர்கள், சாளுக்கியர்கள், சூட்டுகள், விஷ்ணுகுந்தினர்கள் ஆகியோர் குந்தளாவை ஆண்டிருக்கிறார்கள். [2]

குந்தளா இரத்தபாடியுடன் அடையாளம் காணப்பட்டுள்ளது. இது இராஷ்டிரகூடர்களின் குடியேற்றங்களாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. [3]

இரண்டாம் புலிகேசியின் செப்புத் தகடுகள் அவரை மூன்று மகாராட்டிரர்களின் மன்னன் என்று பேசுகின்றன. குந்தளா மகாராட்டிரர்களின் பகுதிகளில் ஒன்றாக இருந்துள்ளது. (மற்ற இரண்டு விதர்பாவும், 99,000 கிராமங்கள் அடங்கிய கொங்கண் பகுதியும்).

காளிதாசன் குந்தளா என்றும், குந்தளாவின் அதிபதி என்றும் தனது தனது படைப்புகளில் (குந்தளநாமதிசா, குந்தலாதிபதி, குந்தலாதிசா) குறிப்பிடுகிறார். [4]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads