குந்தவை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
குந்தவை (Kundavai) என்பது ஒன்பது மற்றும் பதினொன்றாம் நூற்றாண்டுகளுக்கு இடையில் தென்னிந்தியாவில் வாழ்ந்த பல அரசப் பெண்களின் வரலாற்றுச்சிறப்பு மிகுந்த ஒரு பிரபலமான பெயராகும். குந்தவை என்ற பெயரில் வாழ்ந்து சென்ற சில பெண்கள் பின்வருமாறு:
- மேலைக் கங்க மன்னர் முதலாம் பிருதிவிபதியின் (பொ.ஊ. 853–880) மகள் குந்தவை என்பவர் ஆவார். அவர் மல்லாதேவாவனின்[1] மகனும் வாரிசுமான பாண இளவரசர் முதலாம் விக்ரமாதித்யனை மணந்தார். திருவல்லத்தில் உள்ள சிவன் கோவிலுக்கு இவர் பல கொடைகளை வழங்கினார்.[2]
- அரிஞ்சய சோழன் மணந்த கீழைச் சாளுக்கிய இளவரசியின் பெயர் குந்தவை. அவர் வீமன் குந்தவை என்று குறிப்பிடப்படுகிறார். இவரே சோழ மரபில் அறியப்படும் முதல் குந்தவை.
- சுந்தர சோழன் தன் பெரிய தாயார் மீது கொண்ட அன்பால் தன் மகளுக்கு குந்தவை என்று பெயர் சூட்டுகிறார். அவர்தான் முதலாம் ராசராச சோழனின் அக்காள் குந்தவை பிராட்டியார் வல்லவராயன் வந்தியத்தேவனின் பட்டத்து அரசியாக வாழ்ந்தாரென தஞ்சை கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுகிறார்.[3] இவர் ஆழ்வார் பராந்தகன் குந்தவை பிராட்டியார், வல்லவரையர் வந்தியத் தேவர் மாதவேவியார், உடையார் பொன் மாளிகையில் துஞ்சிய தேவர் திருமகளார் ஸ்ரீபராந்தகன் குந்தவை பிராட்டியார் என்று கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் குறிக்கப்படுகிறார்.[4]
- இராசராச சோழன் தன் அக்காளின் மீதிருந்த அன்பின் காரணமாக தன் மகளுக்கு குந்தவை என்று பெயரிட்டார். இந்த குந்தவையே இராசேந்திர சோழனுக்கு தங்கையும் கீழைச் சாளுக்கிய மன்னர் விமலாதித்தனின் பட்டத்து அரசியான குந்தவை ஆழ்வார்.[3]
- கீழைச் சாளுக்கிய மன்னன் இராசராச நரேந்திரனின் மகளும் முதலாம் குலோத்துங்க சோழனின் தங்கையாக ஒரு குந்தவை என்று குறிக்கப்படுகிறார். இவர் இராசராசன் குந்தவை, பராந்தகன் குந்தவை, ஆழ்வார் குந்தவை என்று கல்வெட்டுகளில் குறிக்கப்படுகிறார்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads