குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி
தஞ்சாவூரில் உள்ள அரசுக் கல்லூரி From Wikipedia, the free encyclopedia
Remove ads
குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி (Kunthavai Naacchiyaar Government Arts College for Women) இந்தியாவின் தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் இயங்கிவரும் தமிழக அரசுக்கு சொந்தமான கலை அறிவியல் கல்லூரியாகும். திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் அனுமதியுடன் தன்னாட்சி கல்லூரியாக செயற்பட்டு வருகிறது.[1]
Remove ads
வரலாறு
இக்கல்லூரி, தமிழக அரசால் 1966ஆவது ஆண்டில் அரசினர் கலைக்கல்லூரி என்ற பெயரில் தொடங்கப்பட்டது.வரலாற்றுச் சிறப்பு மிக்க தஞ்சை அரண்மனைக் கட்டிடத்தில் மூன்று புகுமுக வகுப்புகளைக் கொண்டு செயலாற்றத் தொடங்கியது. 1969 ம் ஆண்டு முதல் பட்ட வகுப்புகள் ஆரம்பிக்கப் பட்டன. 1970ஆவது ஆண்டில் புதிதாகக் கட்டப் பட்ட சொந்தக் கட்டிடத்தில் கல்லூரி மாற்றப் பட்டது சென்னைப் பல்கலைக் கழகத்துடன் இணைந்திருந்த இக் கல்லூரி 1982 பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சி எல்லைக்குள் வந்தது.
சுமார் 17.9 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட கல்லூரி இது .1972ஆம் ஆண்டில் பல்கலைக்கழக மானியக் குழுவின் அங்கீகாரம் பெற்றது. 1984ஆம் ஆண்டில் தற்போதைய பெயருக்கு மாற்றப்பட்டது.
Remove ads
வழங்கப்படும் படிப்புகள்
இளநிலைப் படிப்புகள்
கலைப்பாடங்கள்
- தமிழ் [2]
- பொருளியல்
- ஆங்கிலம்
- வரலாறு
- வணிகவியல்
- வணிகநிர்வாகவியல்
அறிவியல் பாடங்கள்
- கணினி அறிவியல்
- தாவரவியல்
- வேதியியல்
- கணிதம்
- இயற்பியல்
- விலங்கியல்
- புள்ளியியல்
- புவியியல்
முதுநிலைப் படிப்புகள்
கலைப்பாடங்கள்
- தமிழ்[3]
- பொருளியல்
- ஆங்கிலம்
- வரலாறு
- வணிகவியல்.
அறிவியல் பாடங்கள்
- கணினி அறிவியல்
- வேதியியல்
- கணிதம்
- இயற்பியல்
- விலங்கியல்
- புவியியல்
ஆய்வியல் நிறைஞர்
- பொருளியல்
- தாவரவியல்
- வணிகவியல்
- தமிழ்
முனைவர் பட்டம்
- கணிதம்
- பொருளியல்
- தாவரவியல்
- இயற்பியல்
- ஆங்கிலம்
- தமிழ்
- வரலாறு
- வணிகவியல்
- விலங்கியல்
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads