கேளுச்சரண மகோபாத்திரா
நடனக் கலைஞர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
குரு கேளுச்சரண மகோபாத்திரா (ஒரியா: ଗୁରୁ କେଳୁଚରଣ ମହାପାତ୍ର; சனவரி 8, 1926 – ஏப்பிரல் 7, 2004) ஒரு தலைசிறந்த இந்திய செவ்வியல் நடனக் கலைஞர்களுள் ஒருவர், நடனாக்குநர், ஒடிசி நடனக்கலையைக் கற்பித்துவந்த புகழ்மிக்க ஒரு குரு. 20-ஆம் நூற்றாண்டில் செவ்வியல் நடன மரபை மீட்டெடுத்தவர்களுள் ஒருவராகப் போற்றப்படுகின்றார்[2]. ஒரிசா மாநிலத்தில் இருந்து இந்திய உயர்விருதாகிய பத்ம விபூசன் விருதைப் பெற்ற முதல் மாந்தர் இவர்[3] குரு கேளுச்சரண மகோபாத்திரா நடன மரபுக்கடல்களைக் கடந்தவர் என்று புகழப்படுகின்றார்.[4]
Remove ads
பெருமைகளும் பரிசுகளும்
- சங்கீத நாடக அகாதமி விருது, 1966
- பத்மசிறீ, 1972
- பத்ம பூசன், 1989
- சங்கீத நாடக அக்காதெமி சிறப்பாளர் விருது, 1991
- பத்ம விபூசன், 2000
- காளிதாச சம்மான் - மத்தியப் பிரதேச அரசு விருது
மேற்கோள்கள்
- ஒடிசி மக்களுக்கு வெறும் களிப்பூட்டுவதற்காக ஆடும் நடனம் அன்று; உள்ளூக்கம் ஊட்டி உயர்விக்கவே. நான் உண்மையில் நடனம் ஆடவில்லை ஆனால் பேரன்பில் உள்வணக்ன்குகின்றேன், ஆனால் காண்போர் இந்த வடிவம் நடனம் என்கின்றனர் ( "Odissi is not a mere dance form to entertain people but to inspire and elevate. I don't actually dance but pray in compassion and the spectators say that this `form' is dancing.") [5]
- உண்மையான நடனம் இரண்டற்ற நிலையின் உணர்வைப் பகிர்வதாகும்; காண்போர் காண்பதில் இருந்தும் பிரிந்துணராத நிலையை உணர்தலாகும். ( "The real dance must convey the feeling of undivided existence, that a spectator can feel that he is not different from the thing observed")[5]
- நடனம் என் வாழ்க்கையைப் பொருளுள்ளதாக்கியது மட்டுமன்று, அதுவே என் முழு வாழ்க்கையும்.. இன்று நான் என்னவாக இருப்பினும் அது என் குருநாதரின் அருளாசி" (Dance has not only made my life purposeful,it has been my whole life... Whatever I am today is entirely due to the blessings of my guru".)
Remove ads
References
மேலும் படிக்க
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads