கொந்தகை தெய்வநாயகப் பெருமாள் கோயில்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தெய்வநாயகப் பெருமாள் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் சிவகங்கை மாவட்டத்தின் கொந்தகை புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும். இக்கோயில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் ஓர் உபகோயிலாகும்.

விரைவான உண்மைகள் கொந்தகை தெய்வநாயகப் பெருமாள் கோயில், ஆள்கூறுகள்: ...

கடல் மட்டத்திலிருந்து சுமார் 165 மீட்டர் உயரத்தில், 9.843355°N 78.185155°E / 9.843355; 78.185155 என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, தெய்வநாயகப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது.

இக்கோயிலின் மூலவர் தெய்வநாயகப் பெருமாள் ஆவார். தாயார்கள் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி ஆவர். புரட்டாசி திருவோணம் மற்றும் புரட்டாசி சனிக்கிழமைகள்[1] வைகுண்ட ஏகாதசி,[2] கருட வீதி உற்சவம்[3] ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads