கொல்லங்கோடு

தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

கொல்லங்கோடு (Kollankodu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இது 16 அக்டோபர் 2021 அன்று பேரூராட்சியில் இருந்து நகராட்சியாக உயர்த்தப்பட்டது . இந்த நகராட்சியில் அமைந்துள்ள பத்திரகாளி அம்மன் கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் தூக்கத் திருவிழா கொண்டாடப்படுகிறது.[3]

விரைவான உண்மைகள்
Remove ads

2021-இல் கொல்லங்கோடு நகராட்சியுடன் இணைத்தல்

கொல்லங்கோடு மற்றும் ஏழுதேசம் பேரூராட்சிகளைக் கொண்டு 16 அக்டோபர் 2021 அன்று புதிதாக நிறுவப்பட்ட கொல்லங்கோடு நகராட்சியுடன் இணைக்கப்பட்டது.[4][5]

அமைவிடம்

கொல்லங்கோடு நகராட்சி கன்னியாகுமரியிலிருந்து 51 கி.மீ. தொலைவிலும், நாகர்கோவிலிருந்து 52 கி.மீ. தொலைவிலும் கடற்கரையை ஒட்டியுள்ளது. அருகமைந்த ஊர்கள் மேற்கில் திருவனந்தபுரம் 35 கி.மீ.; வடக்கில் பாறசாலை 9 கி.மீ.; தெற்கில் மேடவிளாகம் 0.50 கி.மீ. தொலைவிலும் உள்ளது. அருகில் உள்ள தொடருந்து நிலையம் பாறசாலையில் உள்ளது.

நகராட்சியின் அமைப்பு

12.64 சகி.மீ. பரப்பும், 21 வார்டுகளும், 87 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கிள்ளியூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[6]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 8514 வீடுகளும், 38385 மக்கள்தொகையும் கொண்டது.[7][8]

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads