கௌசாம்பி மாவட்டம்
உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கௌசாம்பி மாவட்டம் (Hindi: कौशाम्बी ज़िला, Urdu: کوشامبی ضلع) இந்தியாவின், உத்தரப் பிரதேச மாநில மாவட்டங்களுள் ஒன்று. இதன் நிர்வாகத் தலைமையிட நகரம் மஞ்சான்பூர் ஆகும். இம்மாவட்டம் பிரயாக்ராஜ் கோட்டத்தின் கீழ் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தில் பண்டைய கௌசாம்பி நகரம் பொழிவுடன் விளங்கியது.
Remove ads
பொருளாதாரம்
2006ல் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் கௌசாம்பி மாவட்டத்தை இந்தியாவின் 640 மாவட்டங்களில் மிகவும் பின்தங்கியுள்ள 250 மாவட்டங்களில் ஒன்றாக அறிவித்தது.[1] இம்மாவட்டம் பின்தங்கியுள்ள பகுதிகளுக்கான நிதி வழங்கும் திட்டம் (BRGF) மூலம் உத்தரப்பிரதேசத்தில் பயன்பெறும் 34 மாவட்டங்களில் ஒன்றாகும்.[1]
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி கௌசாம்பி மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 1,596,909.[2] இது தோராயமாக கினி-பிசாவு நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[3] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 313வது இடத்தில் உள்ளது.[2] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 897 inhabitants per square kilometre (2,320/sq mi).[2] மேலும் கௌசாம்பி மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 23.49%.[2] கௌசாம்பி மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 905 பெண்கள் உள்ளனர்.[2] மேலும் கௌசாம்பி மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 63.69%.[2]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads