கௌரிலீலாசமன்வித மூர்த்தி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கௌரிலீலாசமன்வித மூர்த்தி என்பவர் சைவ சமயக் கடவுளான சிவபெருமானின் அறுபத்து நான்கு திருவுருவங்களில் ஒருவராவார். சொல்லிலக்கணம்வேறு பெயர்கள்தோற்றம்உருவக் காரணம்பிரம்ம தேவரின் மகனான தட்சன் பெரும் தவமிருந்து உமையம்மையை மகளாக பெற்றார். தட்சனின் மகளாக பிறந்த உமையம்மை பருவம் வந்ததும் சிவபெருமான் மீது மையல் கொண்டார். தட்சன் படைப்பு தொழிலில் பிரம்ம தேவருக்கு உதவியாக இருந்து வந்தமையால் ஆணவம் கொண்டார். அதனால் சிவபெருமானை உமையம்மையாகி தாட்சாயிணிக்கு மணம் செய்விக்க மறுத்தார். எனினும் மும்மூர்த்திகள், தேவர்கள் அவரிடம் தாட்சாயிணியே உமையம்மை என்ற உண்மையை எடுத்துரைத்தனர். தட்சனின் முழு சம்மதமின்றி நிகழ்ந்த திருமணத்தில், சிவபெருமான் தாட்சாயிணியை தட்சனிடமே விட்டுவிட்டு கையிலை சென்றார். பின் ரிசப வாகனத்துடன் வந்து தாட்சாயிணியை அழைத்துச் சென்றார். இவ்வாறு கௌரியாகிய தாட்சாயிணியுடன் இறைவனாகிய சிவபெருமான் மறைந்து விளையாடிய திருக்கோலம் கௌரிலீலாசமன்வித மூர்த்தியாகும். கோயில்கள்மேலும் காண்கமேற்கோள்கள் |
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads