சந்திரசேகர சரசுவதி

காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது பீடாதிபதி From Wikipedia, the free encyclopedia

சந்திரசேகர சரசுவதி
Remove ads

சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகள் (Chandrashekarendra Saraswati Swamigal) (மே 20, 1894 சனவரி 8, 1994) காஞ்சி காமகோடி பீடத்தின் 68-ஆவது பீடாதிபதியாவார். இவர் காஞ்சி முனிவர், பரமாச்சாரியார், மகாசுவாமி, மகா பெரியவாள் என்றும் அழைக்கப்பட்டார். தெய்வத்தின் குரல் எனும் பெயரில் இந்து மதத் தத்துவங்களைப் புத்தகமாக எழுதியுள்ளார்.

விரைவான உண்மைகள் ஸ்ரீசந்திரசேகர சரசுவதிசுவாமிகள், பிறப்பு ...
Remove ads

இளமை வாழ்வு

Thumb
1933-ல் சந்திரசேகர சரசுவதி ஆச்சார்யர்

சந்திரசேகரேந்திர சரசுவதி, 1894 மே 20 அன்று தென் ஆற்காடு மாவட்டத்தில் விழுப்புரத்தில் பிறந்தார். இவரின் தந்தை சுப்ரமண்ய சாஸ்திரி தமிழ்நாட்டிற்குக் குடிபெயர்ந்தார். மாவட்ட கல்வி அதிகாரியாகப் பணிபுரிந்தவர். இவர் கன்னட மொழி பேசும் ஸ்மார்த்த பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரின் தாயார் மகாலட்சுமியும் திருவையாறுக்கு அருகிலுள்ள ஈச்சங்குடி கிராமத்தைச் சேர்ந்த கன்னட பிராமணர் ஆவார். இவர்களின் இரண்டாவது குழந்தையே மகாபெரியவா என அழைக்கப்பட்ட சந்திரசேகர சரசுவதி சுவாமியாவார்.[1] இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் சுவாமிநாதன்.[சான்று தேவை]

தனது தொடக்கக் கல்வியை, திண்டிவனத்தில் உள்ள ஆற்காடு அமெரிக்கன் மிசன் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். இவருக்கு 1905-ஆம் ஆண்டில் திண்டிவனத்தில் உபநயனம் நிகழ்த்தப்பட்டது. 1906-ஆம் ஆண்டு, காமகோடி பீடத்தின் அறுபத்தி ஆறாவது ஆச்சாரியார் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி, சதுர்மஸ்ய விரதத்தைக் கடைப்பிடித்து திண்டிவனத்திற்கு அருகிலுள்ள பெருமுக்கல் என்ற சிறிய கிராமத்தில் முகாமிட்டிருந்தார். அப்போது ஆச்சாரியாரின் ஆசீர்வாதங்களை சுவாமிநாதன் பெற்றுக் கொண்டார்.

ஆச்சார்யர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரசுவதியின் மறைவிற்குப் பின்னர் சந்திரசேகர சரசுவதியின் தாய் வழி உறவினர் அறுபத்தியேழாவது ஆச்சார்யராக நியமிக்கப்பட்டார். இவர் உடல் நலம் குன்றியதால் சந்திரசேகர சரசுவதி சுவாமிகள் 1907-ஆம் ஆண்டு பிப்ரவரி 13-ஆம் தேதி காஞ்சி காமகோடி பீடத்தின் அறுபத்தெட்டாவது ஆச்சார்யராக சன்னியாசர் சரஸ்வதி என்ற சன்னியாச பெயருடன் நியமிக்கப்பட்டார். பின்னர் வேதங்கள், புராணங்கள், பல்வேறு இந்து நூல்கள் மற்றும் பண்டைய இந்திய இலக்கியங்களுடன் நன்கு பயிற்சி பெற்றார். 1909-ஆம் ஆண்டு இரண்டாண்டுகள் மடத்தினில் தங்கி வேதாந்தங்களைக் கற்றுக் கொண்டார். பின்னர் 1911 முதல் 1914 வரை அகண்ட காவிரியின் வடகரைக் கிராமமான மகேந்திரமங்கலத்தில் கற்றார். இவர் கணிதம், வானியல் மற்றும் புகைப்படத்துறையில் அதிக ஆர்வம் காட்டினார். 1914-ஆம் ஆண்டு கும்பகோணம் திரும்பினார்.

Remove ads

பங்களிப்புகள்

சந்திரசேகரேந்திர சரசுவதி இந்திய நிலப்பரப்பெங்கும் ஆன்மிகப் பயணம் செய்து தனது அறிவைப் பரப்பத் தொடங்கினார். தினமும் சந்தியாவந்தனம், ஶ்ரீசந்திரமெளலீஸ்வரி பூஜை, ஶ்ரீபஞ்சதான்ய பூஜை, காமாட்சி அம்மன் பூஜை ஆகியவற்றைச் செய்வது வேதங்களை ஓதுவது போன்ற இவரது நடவடிக்கைகள் இவரை உலகெங்கும் பிரபலமாக்கியது. இறைவன் சிவனை வழிபடுவதற்காக வந்த காமாட்சி அம்மனுக்காகச் சந்திரசேகர சரசுவதி சுவாமிகள் தன் வாழ்வை அர்ப்பணித்தார். வாழ்நாள் முழுவதும் அத்வைத சித்தாந்தவாதியான ஆதிசங்கரரின்[2] வழியைப் பின்பற்றி நடந்தார். மேலும் வாழ்நாளெல்லாம் கோவில்களைப் புதுப்பிப்பதிலும், பெண்கள் உச்சரிக்காத விஷ்ணுசகஸ்ர நாமம் உள்ளிட்ட மந்திரங்களை உச்சரிக்கச் செய்வதிலும், சரியான உச்சரிப்புடன் வேதங்கள் ஓதுவதையும், சபரிமலை ஐயப்பன் சுவாமி மற்றும் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் ஆகியவற்றின் மீது மக்களுக்கு அதிக பக்தியுணர்வு வளரவும் அக்கோயில்களில் ஆகம விதிகள் தீவிரமாகக் கடைபிடிப்பதையும் நடைமுறைப்படுத்தினார். இவரது 99- வது பிறந்தநாள் கொண்டாட்டங்களை இவரது சீடர்களான ஸ்ரீ ஜெயேந்திரர் மற்றும் ஸ்ரீ விஜயேந்திரர் ஆகியோர் ஒரு பெரிய நிகழ்வாகக் கொண்டாடினர். எனினும், தனது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடாமல், 8 சனவரி 1994-இல் இறந்தார்.

Remove ads

சொற்பொழிவுகள்

சந்திரசேகரேந்திர சரசுவதி ஆதிசங்கரரைப் போலவே நாட்டின் பல்வேறு இடங்களில் சொற்பொழிவாற்றினார். பல இடங்களில் தர்மம், பண்பாடு, கலாச்சாரம் பற்றி மக்களிடம் சொற்பொழிவாற்றினார். திண்ணைகள், ஆற்றுப்படுக்கைகள், சிறிய கூடங்கள் என எல்லா இடங்களிலும் சொற்பொழிவாற்றினார். இவர் ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்பு தெய்வத்தின் குரல் எனும் புத்தகமாகத் தொகுக்கப்பட்டுள்ளது. பின்னர் இந்நூல் ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. நாட்டின் பலபகுதிகளில் சனாதான தர்மத்தின் நடைமுறைகளைக் கொண்டு வந்தார். இதன் பயனாகப் பல்வேறு வேத பாட சாலைகள் உருவாக்கப்பட்டன.

புத்தகங்கள்

  • Svāmī, Candraśekharendra Sarasvatī (2000). Hindu dharma : the universal way of life (4th ed.). Mumbai: Bharatiya Vidya Bhavan. ISBN 978-8172760557.
  • Sri Chandrasekharendra Saraswati (2006). The Vedas (7th ed.). Mumbai: Bharatiya Vidya Bhavan. ISBN 978-81-7276-401-2.
  • Candraśekharendra Sarasvatī Svāmī (2008). Voice of the Guru : The Guru tradition (2nd ed.). Mumbai: Bharatiya Vidya Bhavan. ISBN 978-8172764159.
  • Svāmī, Pūjyaśrī Candrasekharendra Sarasvatī (2001). Śri Śaṅkara Bhagavatpādācārya's Saundaryalaharī = Saundaryalaharī An exposition (1st ed.). Mumbai: Bharatiya Vidya Bhavan. ISBN 978-8172762124.
  • Jagadguru His Holiness Sri Chandrasekharendra Saraswati Swamigal (2008). Fitzgerald, Michael Oren (ed.). Introduction to Hindu dharma : illustrated. Bloomington, Ind.: World Wisdom. ISBN 978-1933316482.
  • (தெய்வத்தின் குரல்)Candraśekharendra Sarasvatī Svāmī (2008). Voice of God Vol 1 and 2 (2nd ed.). Mumbai: Bharatiya Vidya Bhavan. ISBN 978-81-7276-415-9.
  • A search in Secret IndiaPaul Brunton
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads