சாந்தி சிறீஸ்கந்தராசா

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சாந்தி சிறீஸ்கந்தராசா (Shanthi Sriskantharajah, பிறப்பு: 28 அக்டோபர் 1965)[1] இலங்கைத் தமிழ் நிருவாக சேவை அதிகாரியும், அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

விரைவான உண்மைகள் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜாநா.உ, இலங்கை, தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ...
Remove ads

வாழ்க்கைச் சுருக்கம்

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டம், முள்ளியவளையைப் பிறப்பிடமாகக் கொண்ட சாந்தி சிறீஸ்கந்தராஜா முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரியில் கல்வி கற்று, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் படிப்பில் ஈடுபட்டு, மதுரைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். இலங்கை நிருவாக சேவையில் இணைந்து துணுக்காய் பிரதேச சபையில் பிரதித் திட்டமிடல் பணிப்பாளராகப் பணியாற்றினார். ஈழப்போரின் இறுதிக் காலத்தில் எறிகணை வீச்சினால் படுகாயமடைந்து தனது இடது காலை இழந்தவர்.[2]

Remove ads

அரசியலில்

சாந்தி சிறீஸ்கந்தராசா 2015 நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் வன்னி மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராகப் போட்டியிட்டு 18,080 வாக்குகள் பெற்றார். எனினும் அவர் நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகவில்லை.[3][4][5][6] பின்னர் இவர் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் மூலமாக நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.[7]

சமூகப் பணி

துணுக்காயில் மாற்றுத்திறனாளிகளை ஒன்றிணைத்து ஒளிரும் வாழ்வு என்ற அமைப்பை உருவாக்கி செயற்படுத்தி வருகின்றார்.[2]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads