சிலகார வம்சம்
8-13 ஆம் நூற்றாண்டில் ஆண்ட இந்திய வம்சம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிலகார வம்சம் அல்லது சேலரா இராச்சியம் ( Shilahara/Shelara Kingdom ) ஒரு அரச வம்சமாகும், இது கிபி 8 ஆம் நூற்றாண்டில் வடக்கு மற்றும் தெற்கு கொங்கணில் இராஷ்டிரகூடர்கள் காலத்தில் தன்னை நிறுவியது.[5]
இராச்சியம் மூன்று கிளைகளாகப் பிரிக்கப்பட்டது:
- முதல் கிளை வட கொங்கணை ஆட்சி செய்தது
- இரண்டாவது கிளை தெற்கு கொங்கணை ஆட்சி செய்தது (கி.பி.765 மற்றும் 1029 க்கும் இடையே)
- மூன்றாவது கிளை கோலாப்பூர், சாத்தாரா மற்றும் பெல்காம் (கி.பி 940 மற்றும் 1215 க்கு இடையில்) பகுதியில் ஆட்சி செய்தது, அதன் பிறகு இவர்கள் யாதவர்களால் தோற்கடிக்கப்பட்டனர். [6]
Remove ads
தோற்றம்
8 மற்றும் 10 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் தக்காண பீடபூமியை ஆண்ட இராஷ்டிரகூட வம்சத்தின் அடிமைகளாக இந்த வம்சம் முதலில் தொடங்கியது. சுமார் கி.பி. 800 களில் இராஷ்டிர கூட மன்னன் இரண்டாம் கோவிந்தன், வட கொங்கண் பகுதியை சிலகார குடும்பத்தின் கபார்தின் என்பவருக்கு வழங்கினார் வடக்கு சில்ஹாரா குடும்பத்தின் நிறுவனர். அன்றிலிருந்து வட கொங்கண் பகுதி கபார்தி-திவீபம் அல்லது காவடித்வீபம் என்று அறியப்பட்டது.
வம்சம் தகரா-புராதீசுவரர் என்ற பட்டத்தை கொண்டிருந்தது. இது அவர்கள் முதலில் தகரா ( உஸ்மானாபாத் மாவட்டத்தில் உள்ள நவீன தாரா) என்ற பகுதியிலிருந்து வந்தவர்கள் என்பதைக் குறிக்கிறது. 1343 இல் சால்சேட் தீவு மற்றும் இறுதியில் முழு தீவுக்கூட்டமும் முசாபரித்து வம்சத்திடம் சென்றது.
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads