சிவகிரி (ஈரோடு)
தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிவகிரி (Sivagiri, Erode) தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டத்தில் அமைந்த ஒரு பேரூராட்சி ஆகும். சிவகிரியானது, அண்ணாமலைக்கோட்டை, அம்மன்கோயில், சின்னியகவுண்டம்பாளையம், தலையநல்லூர், பெரியார் தெரு, குமரன் தெரு போன்ற 18 ஊர்களை உள்ளடக்கியது.
சிவகிரியில், ஸ்ரீ காமாக்ஷிஅம்மன் திருக்கோயில், ஸ்ரீ குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோயில் ஆகியவை உள்ளன. மேலும் 18 சித்தர்களில் ஒருவரான புலிப்பாணி சித்தருக்கு, சுனைகுன்றில் கோவில் அமைந்துள்ளது. இப்பேரூராட்சியில், விசைத்தறி நெசவு மற்றும் விவசாயம் சார்ந்த இயந்திர தளவாடங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
Remove ads
அமைவிடம்
ஈரோடு - வெள்ளக்கோயில் மாநில நெடுஞ்சாலையில் அமைந்த சிவகிரி பேரூராட்சி, ஈரோட்டிலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது. இதன் தெற்கே வெள்ளக்கோயில் 24 கி.மீ. தொலைவில் உள்ளது. அருகமைந்த தொடருந்து நிலையம், 10 கி.மீ. தொலைவில் உள்ள ஊஞ்சலூரில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
23.40 ச.கி.மீ. பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 49 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, மொடக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)க்கும், ஈரோடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5,407 வீடுகளும், 17,979 மக்கள்தொகையும் கொண்டது.[4]
புவியியல்
சிவகிரி பகுதியானது, 11.1179°N 77.7881°E என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 222 மீட்டர் (728 அடி) உயரத்தில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
