சுசந்திகா ஜயசிங்க
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சுசந்திகா ஜயசிங்க (பிறப்பு டிசம்பர் 17, 1975), இலங்கையைச் சேர்ந்த ஓர் ஓட்ட வீராங்கனை ஆவார். 100 மற்றும் 200 மீட்டர் குறுந்தூரப் போட்டிகளில் பல வெற்றிகளைப் பெற்றவர். 2000 ஆம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் 200 மீட்டர் ஓட்டத்தில் இரண்டாமிடம் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார், ஆரம்பத்தில் இவரிற்கு மூன்றாம் இடமே கிடைத்தது எனினும் தங்கப்பதக்கம் வென்ற மரியன் ஜோன்ஸ் ஊக்கமருந்து சோதனையில் சிக்கியமையால் அவரின் பதக்கம் பறிக்கப்பட்டது இதையடுத்து சுசந்திகாவிற்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.[1] 1948 இன் பின் ஒலிம்பிக் பதக்கம் வென்ற ஒரே இலங்கையர் இவராவார்.
Remove ads
15வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், 2006
டோகாவில் நடைபெற்ற 15வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 100மீ ஓட்டப் பந்தயத்தில் சுசந்திகா வெள்ளிப் பதக்கம், 200மீ பந்தயத்தில் வெண்கலப்பதக்கமும் பெற்றார்.
உலக தடகளப் போட்டிகள், 2007
இவர் ஜப்பானின் ஒசாகா நகரில் நடைபெற்ற உலக தடகளப் போட்டிகளில் கலந்து கொண்டு மகளிருக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் 22.63 விநாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.[2]
தனிப்பட்ட சாதனைகள்
சாதனைகள்
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads