சுசில் சந்திரா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சுசில் சந்திரா (Sushil Chandra) 14 பிப்ரவரி 2019 முதல் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தேர்தல் ஆணையராக 12 ஏப்ரல் 2021 வரை இருந்தார்[2] இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா 12 ஏப்ரல் 2021 அன்று பணி ஒய்வு பெற்றதால், அடுத்த இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராக 13 ஏப்ரல் 2021 அன்று இந்தியக் குடியரசுத் தலைவரால் சுசில் சந்திரா நியமிக்கப்பட்டார். சுசில் சந்திரா, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராக 13 ஏப்ரல் 2021 அன்று பதவி ஏற்றுக்கொண்டார்.[3][4][5] மே 14, 2022 அன்று அகவை முதிர்வின் காரணமாக பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.[6]
Remove ads
வரலாறு
சுசில் சந்திரா 1980ஆம் ஆண்டில் இந்திய வருவாய்ப் பணி அதிகாரி ஆனவர். இவர் 15 பிப்ரவரி 2019-இல் இந்தியத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்படுவதற்கு முன்னர், 2016 முதல் இந்திய அரசின் மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவராக பணியாற்றினார். இவர் இந்திய வருவாய் சேவையில் 38 ஆண்டுகள் பணியாற்றினார்.
மேலும் இவர் இணக்க மேலாண்மை மற்றும் சர்வதேச வரிவிதிப்பு ஆகிய துறைகளில் பணியாற்றியுள்ளார். வரிகள் வருவாய் புலனாய்வுத் துறையில் மும்பை மற்றும் குஜராத் புலனாய்வு இயக்குநராகவும், புலனாய்வு பணிப்பாளர் ஆணையாளராகவும் பணியாற்றியுள்ளார்.
பினாமி பரிவர்த்தனைகள் (தடுப்பு) திருத்தத் சட்டத்தை இயற்ற காரணமாக இவர், பினாமி பரிவர்த்தனைகள் மீதான அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை தீவிரமாக வலுப்படுத்தினார்.
Remove ads
இளமை
15 மே 1957 அன்று பிறந்த சுசில் சந்திரா ரூர்கி தொழில் நுட்ப நிறுவனத்தில் இளநிலை தொழில்நுட்ப பட்டப்படிப்பை முடித்தார். மேலும் டேராடூன் டி ஏ வி கல்லூரியில் இளநிலை சட்டப் படிப்பை முடித்தார். இவர் இந்திய வருவாய்ப் பணியில் சேர்வதற்கு முன்னர் இந்தியப் பொறியியல் பணி அதிகாரியாக இருந்தார். சுசில் சந்திரா இந்திய மேலாண்மை கழகம் பெங்களூரு மற்றும் அனைத்துலக நாணய நிதியம் போன்ற நிறுவனங்களில் நிதி மேலாண்மை குறித்த பயிற்சிகள் எடுத்துள்ளார்.
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads