ஜார்க்கண்டு அரசு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜார்க்கண்டு அரசு என்பது ஜார்க்கண்டு மாநிலத்தை ஆளும் அமைப்பாகும். இது செயலாக்கத் துறை, நீதித் துறை, சட்டவாக்க அவை ஆகிய மூன்று பிரிவுகளைக் கொண்டது. மாநில அரசின் தலைமையகம் ராஞ்சியில் உள்ளது. குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் ஆளுநர், அரசின் உயர் அதிகாரி ஆவார். மாநில சட்டமன்றத்தின் நிகழ்வுகளை குடியரசுத் தலைவருக்கு அறிக்கையாக அளிப்பார். ஆனால், மாநில முதல்வருக்கே அதிக அதிகாரம் இருக்கும்.
Remove ads
நீதித் துறை
ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் ராஞ்சியில் உள்ளது. இது இந்த மாநில நீதித் துறையின் உயர் அமைப்பாகும்.[1]
சட்டவாக்க சபை
இந்த மாநிலத்தில் சட்டம் இயற்றும் முறை ஓரவை முறைமை ஆகும். எனவே, சட்டமன்றம் மட்டும் உள்ளது. சட்டமன்றத்தில் 81 உறுப்பினர்கள் இருப்பர். ஒவ்வொருவரும் ஐந்தாண்டுக் காலம் பதவியில் இருப்பர்.[2]
மேலும் காண்க
மேற்கோள்கள்
இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads