ஜெயலட்சுமி (நடிகை)

இந்தியத் திரைப்பட நடிகை From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஜெயலட்சுமி ரெட்டி அல்லது பரவலாக படாபட் ஜெயலட்சுமி (1958–1980) ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாள மொழித் திரைப்படங்களில் நடித்தவர். மலையாளத் திரைப்படத்துறையில் சுப்ரியா என்ற பெயரில் நடித்தார். தமிழில் அவள் ஒரு தொடர்கதை, முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை ஆகிய திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தார்.

விரைவான உண்மைகள் ஜெயலட்சுமி, பிறப்பு ...
Remove ads

வாழ்க்கைக் குறிப்பு

தொடக்ககால வாழ்க்கை

ஜெயலட்சுமி, இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் பிறந்தவர். அந்துலேனி கதா என்ற திரைப்படத்தில் ஏற்ற "படாபட்" என்ற வேடம் பலராலும் அறியப்பட்டதால் "படாபட்" ஜெயலட்சுமி என்றவாறு அழைக்கப்படலானார்.

தனிப்பட்ட வாழ்க்கை

எம். ஜி. ராமச்சந்திரனது உறவினர் ஒருவரைத் திருமணம் செய்து கொண்ட இவர், 1980ஆம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்டார்.[1]

திரை வாழ்க்கை

1972 ஆவது ஆண்டில் அ. வின்சென்ட் இயக்கத்தில் வெளியான தீர்த்தயாத்ரா மலையாளத் திரைப்படத்தின் மூலமாக சுப்ரியா என்ற பெயரில் நடிகையாக அறிமுகமானார். 1973இல் இது மனுசுயனோ? என்ற மலையாளப் படத்தில் நடித்தார். தமிழில் கே. பாலசந்தர் இயக்கிய அவள் ஒரு தொடர்கதை திரைப்படத்தில் ஜெயலட்சுமி என்ற வேடத்தில் நடித்தார். இதனைத் தொடர்ந்து அந்துலேனி கதா என்ற திரைப்படத்தில் படாபட் என்ற வேடத்திலும் நடித்தார். தொடர்ந்து, ஆறிலிருந்து அறுபது வரை, முள்ளும் மலரும் உள்ளிட்ட திரைப்படங்களில் ரசினிகாந்த், கமல்ஹாசன், கிருஷ்ணா, என். டி. ராமாராவ், சிரஞ்சீவி உள்ளிட்ட தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்தவர்.

Remove ads

நடித்த திரைப்படங்கள்

இது முழுமையான பட்டியல் அல்ல.

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, திரைப்படம் ...
Remove ads

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads