தணிகைச்செல்வன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தணிகைச்செல்வன் (பிப்ரவரி 28, 1935 - அக்டோபர் 29, 2024) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிஞராவார். எழுபதாண்டுகளாகக் கவிதைகள் எழுதியும் பல பொதுவுடைமை மேடைகளில் கவிதை வாசித்தும் வந்துள்ளார்.[1]
வாழ்க்கைக் குறிப்பு
இவர் மதராஸ் மாகாணத்தின், செங்கல்பட்டு மாவட்டததில் பாலாற்றங்கரையின் அருகே உள்ளஉறைக்காட்டுப்பேட்டையில் 1935 பிப்ரவரி 28 ஆம் நாள் நெசவாளர் குடும்பத்தில் பிறந்தார்.[1] மருத்துவத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றார். வயது மூப்பின் காரணமாக 90 ஆவது வயதில் 2024 அக்டோபர் 29 ஆம் நாள் காலமானார்.[2]
இலக்கியப் பணி
செம்மலர், குடியரசு, முரசொலி, நந்தன், தமிழர் கண்ணோட்டம், தாய்மண், சிந்தனையாளன், தினமணிக் கதிர், தென்மொழி, கவிதாசரண் போன்ற இதழ்களில் கவிதைகளை எழுதியுள்ளார்.
கவிதை நூல்கள்
இவர் எழுதி வெளியிட்ட கவிதை நூல்கள்.
- தணிகைச்செல்வன் கவிதைகள் (1975)
- சமூக சேவகி சேரிக்கு வந்தாள்(1978)
- பூபாலம் (1981)
- ஒரு துண்டு இந்தியாவும் நானும் (1983)
- சிவப்பதிகாரம் (1986)
- உலக்கையிலும் பூ பூக்கும் (1991)
- சகாராவின் தாகம் (1997)
- தணிகைச்செல்வன் கவிதைகள் தொகுப்பு நூல்கள்(2001)[3]
கட்டுரை நூல்கள்
இவர் எழுதி வெளியிட்ட கட்டுரை நூல்கள்.
- இலக்கும் இலக்கியமும் (2003)
- தத்துவ தலைமை (2015)
- ஆட்சி மாற்றமும் அடிப்படை மாற்றமும் ஒரு மார்க்சிய அரிச்சுவடி (2023)
- கிழக்கு முதல் கிழக்கு வரை
- கவிதைகளில் அவன் மானிடன்
Remove ads
பொதுவுடைமைப் பணி
மருத்துவத் துறைப் பணியிலிருந்து பொதுவுடைமைச் சிந்தனை ஈர்ப்பால் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் 1958 இல் தன்னை இணைத்துக் கொண்டார்.[4] சீனப் போரின் போது இரண்டுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்டார்.[1] தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை உருவாக்கிய முன்னோடிகளுள் ஒருவராவார். ஈழப் பிரச்சினையில் கட்சியில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால் சிபிஎம் கட்சியிலிருந்தும் தமுஎசவிலிருந்தும் விலகினார்.[1]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads