தாரை (இசைக்கருவி)

From Wikipedia, the free encyclopedia

தாரை (இசைக்கருவி)
Remove ads

தாரை என்பது ஒரு தமிழிசை கருவி. இது திருவிழாக்கள், நாட்டுப்புற நடனங்கள் மற்றும் திருமணங்கள் ஆகியவற்றின் போது இசைக்கப்படும் ஒரு பாரம்பரிய கருவியாகும். தமிழ்நாடு மற்றும் கேரளாவின் சில பகுதிகளில் இந்த கருவி முக்கியமாக வாசிக்கப்படுகிறது. இந்த கருவியில் பல வகைகள் உள்ளன, நீளமான மற்றும் குறுகிய தாரைகள், வளைந்த அல்லது நேர் தாரைகள். மேலும் வெளிப்புற குழாய் உலோகம் அல்லது மரத்தால் செய்யப்படலாம். இந்த வாத்தியம் பொதுவாக தப்பட்டை உடன் இசைக்கப்படும். மேலும் பாரம்பரிய நிகழ்வுகள் மற்றும் விழாக்களில் பாரம்பரிய தவில் மற்றும் நாதஸ்வரம் இசைக்கருவிகளுடன் இசைக்கப்படலாம்.

விரைவான உண்மைகள் வேறு பெயர்கள், வகைப்பாடு ...
Remove ads

வரலாறு

இந்த கருவியின் சரியான தோற்றம் தெளிவாக இல்லை. இந்த கருவியானது தமிழ் மக்களால் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட பண்டைய பூர்வீக இசைக்கருவிகளில் ஒன்று.[1][2] கிபி 6 ஆம் நூற்றாண்டை சேர்ந்த பன்னிரண்டு-தொகுதிகள் கொண்ட திருமுறை தொகுப்பு, இந்த கருவியைப் பற்றி குறிப்பிடுகிறது.[3][4][5]

சங்கொடு தாரை காளந் தழங்கொலி முழங்கு பேரி
வெங்குரற் பம்பை கண்டை வியன்றுடி திமிலைதட்டி
பொங்கொலிச் சின்ன மெல்லாம்பொருபடை மிடைந்தபொற்பின்
மங்குல்வான் கிளர்ச்சி நாண மருங்கெழுந் தியம்பி மல்க --திருமுறை 581[6]

முனிவர் அகத்தியர் சித்த மருத்துவம் பற்றிய விவரங்களை மற்ற முனிவர்களுக்கு பிரச்சாரம் செய்தபோது, ​​பாரம்பரிய தாரை உள்ளிட்ட இசையுடன் ஊர்வலம் மூலம் அவரை வரவேற்றனர்.[7]

Remove ads

கட்டுமானம் மற்றும் மாறுபாடுகள்

Thumb
தமிழ் திருமணம் ஒன்றில் வாசிக்கப்படும் பெரும்தாரைகள்

இந்த கருவி வளைந்தோ அல்லது நேராகவோ இருக்கலாம். வளைந்த தாரை பொதுவாக உலோகம் அல்லது பித்தளை போன்றவற்றால் ஆனது. இது கொம்புதாரை என அழைக்கப்பட்டது.[8][9] அரைவட்ட கொம்புத் தாரை என்பது பிறை வடிவ பித்தளை கருவியாகும்.[8]

இது சுமார் 12-அடி நீளம் கொண்ட மரத்தால் ஆன ஒரு மெல்லிய குச்சி போலவும் இருக்கும். காற்றழுத்தம் மூலம் தொடர்ச்சியான ஒலியை உருவாக்கும். [3][10] இதில் இரண்டு வகைகள் உள்ளன: அறியப்பட்ட சிறிய பதிப்பு "குட்டத்தாரை" மற்றும் "நெடுந்தறை" என்று அழைக்கப்படும் ஒரு நீண்ட பதிப்பு.[11][12]

Remove ads

பயன்பாடு

தாரை என்பது ஒரு தமிழிசை கருவி.[13][14] இது திருவிழாக்கள், நாட்டுப்புற நடனங்கள் மற்றும் திருமணங்கள் ஆகியவற்றின் போது இசைக்கப்படும் ஒரு பாரம்பரிய கருவியாகும்.[15][13] இந்த வாத்தியம் இந்து கோவில் ஊர்வலங்களில் இசைக்கப்படுகிறது.[16][17] இது முனீஸ்வரர் போன்ற பாரம்பரிய தமிழ் தெய்வங்களின் வழிபாட்டில் பயன்படுத்தப்படுகிறது.[18]

சங்குந்த சேகந்தி தாரை பறை வாத்தியம்
மங்களமாய் முழங்கிட மகிமையோடு வரும்
தோங்கும் மீசை கதையாம், துடிக்கும் கண்ணில் சக்தியாம்
இங்கிதமாய் நெத்தியில் ஒளிரும் நீறு வெண்மையாம் --முனீஸ்வரர் வழிபாடு[18]

இந்த வாத்தியம் பொதுவாக தப்பட்டை உடன் இசைக்கப்படும். மேலும் பாரம்பரிய நிகழ்வுகள் மற்றும் விழாக்களில் பாரம்பரிய தவில் மற்றும் நாதஸ்வரம் இசைக்கருவிகளுடன் இசைக்கப்படலாம்.[17][2][19] இது சலங்கையாட்டம் போன்ற தமிழ் நாட்டுப்புற நடனங்கள் போன்றவற்றின் போது பின்னணியில் இசைக்கப்படுகிறது.[10][13]

மேற்கோள்கள்

இவற்றையும் காணவும்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads