திருக்காட்டுப்பள்ளி

From Wikipedia, the free encyclopedia

திருக்காட்டுப்பள்ளிmap
Remove ads

திருக்காட்டுப்பள்ளி (Thirukattupalli), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு பேரூராட்சி ஆகும். இங்கு சுந்தரர், திருஞானசம்பந்தரால் பாடப்பட்ட அக்னீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இப்பேரூராட்சியிலிருந்து தான் காவிரி ஆற்றிலிருந்து குடமுருட்டி ஆறு பிரிகிறது.

விரைவான உண்மைகள்
Remove ads

அமைவிடம்

திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியிலிருந்து, தஞ்சாவூர் 30 கி.மீ; திருச்சி 32 கி.மீ; திருவையாறு 17 கி.மீ; பூதலூர் 8 கி.மீ தொலைவிலும் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

6.5 ச. கி. மீ. பரப்பளவும், 15 வார்டுகளும், 52 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி திருவையாறு சட்டமன்றத் தொகுதிக்கும், தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள் தொகை பரம்பல்

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 3,304 வீடுகளும், 12,972 மக்கள்தொகையும் கொண்டது.[5]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads