திருமங்கலம் வட்டம்

From Wikipedia, the free encyclopedia

திருமங்கலம் வட்டம்
Remove ads

திருமங்கலம் வட்டம் , தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களில் ஒன்றாகும்.[1] உசிலம்பட்டி வருவாய் கோட்டத்தில் உள்ள இந்த வட்டத்தின் தலைமையகமாக திருமங்கலம் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் ஆறு உள்வட்டங்களும், 108 வருவாய் கிராமங்களும் இருந்தன.[2]

Thumb
திருமங்கலம் வட்டம் 1868ன் மாதிரி வரைபடம்

திருமங்கலம் வட்டத்தின் மூன்று உள்வட்டங்களைக் கொண்டு, புதிய கள்ளிக்குடி வருவாய் வட்டத்தை, தமிழக முதல்வர், 16 ஆகஸ்டு 2018 அன்று காணொலி காட்சி மூலம் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து துவக்கி வைத்தார்.[3] இவ்வட்டடத்தில் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

Remove ads

தற்போதைய திருமங்கலம் வட்டத்தின் நிலப்பரப்புகள்

தற்போது திருமங்கலம் வருவாய் வட்டத்தில்[4] திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் 38 ஊராட்சிகள் மட்டும் உள்ளது. இவ்வட்டத்திலிருந்த கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியப் பகுதிகள், புதிதாக நிறுவப்பட்ட கள்ளிக்குடி வட்டத்தின் நிலப்பரப்பில் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 114,286 வீடுகளும், 229,645 மக்கள்தொகையும் கொண்டது. மக்கள்தொகையில் 115,359 ஆண்கள் ஆகவும்; 114,286 பெண்கள் ஆகவும் உள்ளனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 78.62% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 991 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 23983 ஆகவுள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 918 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 39,476 மற்றும் 70 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 95.33%, இசுலாமியர்கள் 3.14%, கிறித்தவர்கள் 1.37% & பிறர் 0.15% ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் 77.7% கிராமபுறங்களில் வாழ்கின்றனர். [5]

Remove ads

பருத்தி விவசாயம்

1600களில் மதுரை மாவட்டத்தின் 80 விழுக்காடு பருத்தி விவசாயம், திருமங்கலம் வட்டத்தில் மட்டுமே நடந்தது. கரிசல் மண் உறுதியாக இருந்ததாலும், முறையான பராமரித்தலினாலும் இந்தியாவின் மற்ற பருத்தியை விட திருமங்கலம் பருத்தியே அடர் வெள்ளை நிறமாக இருந்தது. இதனாலேயே திருமங்கலத்துப் பருத்திக்கு "தின்னிவெள்ளைப் பருத்தி" என்று பெயரும் உண்டு. கரிசல் மண்ணும் உறுதியாக இருந்ததால், உழுவதற்கான மாடுகள் அனைத்தும் மைசூரிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. விளைந்த பருத்தியை திருநெல்வேலியிலுள்ள பஞ்சு ஆலைக்கு எடுத்துச்சென்று விதையிலிருந்து சுத்தமான பஞ்சு பிரிக்கப்படும். பின்னர், மதுரையிலுள்ள ஹார்வே மில்'லிற்கு எடுத்து வந்து நூலாகத் திரிக்கப்பட்டு ஆண்டிற்கு 1200 டன் பஞ்சு ஏற்றுமதி செய்யப்பட்டது. பஞ்சின் வெள்ளை நிறத்தின் காரணமாக, பருத்தியின் விலையும் உட்சத்தைத் தொட்டது. 1877ல் திருமங்கலத்தில் ஏற்பட்ட பெருமழை மற்றும் குண்டாற்றில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளம், அதற்கு அடுத்தாற் போல் வந்த வறட்சியின் காரணமாக பருத்தி விவசாயம் கைவிடப்பட்டது[6].

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads