திருமாணிக்குழி
தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருமாணிக்குழி என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் கடலூர் (முன்னர் தென்னாற்காடு) மாவட்டத்திலுள்ள கடலூர் ஊராட்சி ஒன்றியத்தின் திருமாணிக்குழி ஊராட்சிக்குட்பட்ட ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[2][3][4][5][6]
Remove ads
அமைவிடம்
கடல் மட்டத்திலிருந்து சுமார் 49.49 மீ. உயரத்தில், (11.7356°N 79.6842°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு திருமாணிக்குழி அமையப் பெற்றுள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், திருமாணிக்குழி ஊரின் மொத்த மக்கள்தொகை 2,769 பேர் ஆகும். இதில் 1,381 பேர் ஆண்கள் மற்றும் 1,388 பேர் பெண்கள் ஆவர்.[7]
சமயம்
இந்துக் கோயில்கள்
வாமனபுரீசுவரர் கோயில் என்ற சிவன் கோயில் ஒன்று திருமாணிக்குழி பகுதியில் அமைந்துள்ளது.[8] மேலும், ஆதிசக்தி சிவபாலசுப்பிரமணியர் கோயில் என்ற முருகன் கோயில் ஒன்றும் இங்குள்ளது. இக்கோயில்கள், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்குகின்றன.[9][10]
அரசியல்
திருமாணிக்குழி பகுதியானது, குறிஞ்சிப்பாடி (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, கடலூர் மக்களவைத் தொகுதி சார்ந்தது.[11]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads