திருவட்டாறு
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருவட்டாறு (ஆங்கிலம்:Thiruvattaru), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் வட்டம் மற்றும் திருவட்டாறு ஊராட்சி ஒன்றியத்தின் நிர்வாகத் தலைமையிடமும் ஒரு பேரூராட்சி ஆகும். இங்குள்ள திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும்.
Remove ads
அமைவிடம்
திருவட்டாறின் கிழக்கில் குலசேகரம் 5 கி.மீ.; மேற்கில் மார்த்தாண்டம் 10 கி.மீ.; வடக்கில் திற்பரப்பு 10 கி.மீ.; தெற்கில் தக்கலை 20 கி.மீ. தொலைவில் உள்ளது. அருகமைந்த தொடருந்து நிலையம், 15 கி.மீ. தொலைவில் உள்ள குழித்துறையில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
6.30 ச.கி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 41 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி குளச்சல் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,836 வீடுகளும், 18,985 மக்கள்தொகையும் கொண்டது.[4]
ஆதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads