திருவேங்கடம்
தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்திலுள்ள ஒரு பேரூராட்சி From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருவேங்கடம் (Thiruvengadam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். சங்கரன்கோயில் வட்டம் பிரிக்கப்பட்டு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் திருவேங்கடம் வட்டம் உருவாக்கப்பட்டது.
Remove ads
அமைவிடம்
இப்பேரூராட்சி திருநெல்வேலியிலிருந்து 80 கி.மீ. தொலைவிலும்; கோவில்பட்டியிலிருந்து 25 கி.மீ. தொலைவிலும்; சங்கரன்கோவிலிருந்து 18 கி.மீ. தொலைவிலும்; சிவகாசியிலிருந்து 28 கி.மீ. தொலைவிலும் உள்ளது. சங்கரன்கோவில் இதன் அருகமைந்த தொடருந்து நிலையம் ஆகும்.
பேரூராட்சியின் அமைப்பு
15.60 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 30 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி சங்கரன்கோவில் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2368 வீடுகளும், 8337 மக்கள்தொகையும் கொண்டது.[4][5]
ஆறுகள்
திருவேங்கடம் ஊரில் நிட்சேப நதி (வைப்பாறு )பாய்கிறது. இவ்வாற்றின் குறுக்கே தடுப்பணை ஒன்று கட்டப்பட்டு அந்த நீர் கீழத்திருவேங்கடத்தின் கூத்தாடி குளத்துக்கு கால்வாய் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.
வழிபாட்டுத் தலங்கள்
- யோக ஆஞ்சநேயர் திருக்கோவில்(சங்குபட்டி விலக்கு,நரிபாறை)
- அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் ( மதாங்கோவில்)
- மீனாட்சி அம்மன் உடனுறை சொக்கநாதர் கோவில் (சிவன் கோவில்)
- திருவேங்கடநாதர் கோவில்
- படிக்காசு விநாயகர் கோவில்
- காளியம்மன் கோவில்
- முப்பிடாரி அம்மன் கோவில்
- வனப்பேச்சியம்மன் கோவில
- அய்யனார் கோவில்.
கல்வி நிலையங்கள்
- ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி
- சி.எஸ்.ஐ துவக்கப்பள்ளி
- அரசு மேல்நிலைப் பள்ளிகள் (தமிழ் & ஆங்கிலம் பயிற்று மொழிகள்)
தனியார் பள்ளிகள் (ஆங்கில வழி மட்டும்)
- ஸ்ரீ கலைவாணி மெட்ரிகுலேசன் பள்ளி
- கெங்குசாமி நாயுடு மெட்ரிகுலேசன் பள்ளி
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads