தி. பரமசிவ ஐயர்

இந்திய நீதிபதி. வேத அறிஞர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

நீதிபதி தியாகராஜ பரமசிவ ஐயர் (Thyagaraja Paramasiva Iyer) (1863–1943) ஓர் வேத அறிஞரும், எழுத்தாளரும் ஆவார். இவர் மைசூரின் மன்னரான பத்தாம் சாமராச உடையாரின் ஆட்சிக் காலத்தில் பெங்களூரின் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாகப் பணியாற்றினார்.[1] இவர் இந்திய நீதிபதியும் மற்றும் பிரம்மஞான சபையின் உறுப்பினருமான தி. சதாசிவ ஐயரின் சகோதரரும் மற்றும் புகழ்பெற்ற கன்னடக் கவிஞர் த. ப. கைலாசத்தின் தந்தை ஆவார்.[1] பரமசிவ ஐயர் புவியியல், கனிமம், கரிம வேதியியல், வேளாண்மை, வானியல் போன்ற பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்றிருந்தார். இவர் கிரேக்க மற்றும் லத்தீன் இலக்கியங்களிலும் நன்கு புலமைப் பெற்றிருந்தார். வேத மொழியியலில் ஒப்பீட்டு ஆய்வுகளை மேற்கொண்டார்.

விரைவான உண்மைகள் தி. பரமசிவ ஐயர், பிறப்பு ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads