தூய இருதய ஆண்டவர் பெருங்கோவில் (புதுச்சேரி)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா புதுச்சேரியின் இரயில் நிலையம் அருகே அமைந்துள்ள கத்தோலிக்க ஆலயமாகும்.[1] 1895ஆம் ஆண்டு, புதுவை-கடலூர் உயர் மறைமாவட்டத்தின் அப்போதைய பேராயர், மேதகு. காந்தி, அம்மறைமாவட்டத்தை இருதய ஆண்டவருக்கு அர்ப்பணித்தார். அதன் நினைவாக இக்கோவில் 1902ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, 1907-இல் கட்டி முடிக்கப்பட்டது. மேதகு. காந்தி இவ்வாலயத்தை 17, திசம்பர் 1907-இல் அருட்பொழிவு செய்து, முதல் திருப்பலி நிறைவேற்றினார். இக்கோவிலை தலைமையாகக் கொண்டு 27 சனவரி 1908-இல் புதிய பங்கு நிறுவப்பட்டது.
Remove ads
பசிலிக்காவாக
2008-2009ஆண்டு இவ்வாலயத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. அதன் முடிவில் இவ்வாலயத்தை பசிலிக்காவாக மாற்ற முயற்சிகள் துவங்கின.[2][3]
02, செப்டம்பர், 2011-அன்று திருப்பீட இந்திய தூதுவர், பேராயர் சால்வதோர் பெனோகியோ அவர்கள் இக்கோவிலுக்கு வந்து, திருத்தந்தையின் சார்பாக இதனை பசிலிக்காவாக உயர்த்தினார்.[4]
இது இம்மறைமாவட்டத்தின் முதல் பசிலிக்காவாகும். இதனோடு சேர்த்து, தமிழகத்தில் 6, இந்தியாவில் 20 மற்றும் ஆசியாவில் 50 பசிலிகாக்களும் உள்ளன.
Remove ads
படத்தொகுப்பு
- ஆலயத்தின் பழைய பீடம்
- ஆலயத்தின் புதிய பீடம்
ஆதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads