தூய இருதய ஆண்டவர் பெருங்கோவில் (புதுச்சேரி)

From Wikipedia, the free encyclopedia

தூய இருதய ஆண்டவர் பெருங்கோவில் (புதுச்சேரி)map
Remove ads

தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா புதுச்சேரியின் இரயில் நிலையம் அருகே அமைந்துள்ள கத்தோலிக்க ஆலயமாகும்.[1] 1895ஆம் ஆண்டு, புதுவை-கடலூர் உயர் மறைமாவட்டத்தின் அப்போதைய பேராயர், மேதகு. காந்தி, அம்மறைமாவட்டத்தை இருதய ஆண்டவருக்கு அர்ப்பணித்தார். அதன் நினைவாக இக்கோவில் 1902ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, 1907-இல் கட்டி முடிக்கப்பட்டது. மேதகு. காந்தி இவ்வாலயத்தை 17, திசம்பர் 1907-இல் அருட்பொழிவு செய்து, முதல் திருப்பலி நிறைவேற்றினார். இக்கோவிலை தலைமையாகக் கொண்டு 27 சனவரி 1908-இல் புதிய பங்கு நிறுவப்பட்டது.

விரைவான உண்மைகள் தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா, புதுச்சேரி, அமைவிடம் ...


Remove ads

பசிலிக்காவாக

இவ்வாலயத்தை பசிலிக்காவாக உயர்த்தி திருத்தந்தையின் பெயரால் அனுப்பப்பட்ட அறிக்கை
Thumb
இலத்தீனில்
Thumb
ஆங்கிலத்தில்
இவை ஆலயத்தின் மைய்ய வாயிலின் புனித நீர் தொட்டிக்கு மேல் பொதிக்கப்பட்டுள்ளது

2008-2009ஆண்டு இவ்வாலயத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. அதன் முடிவில் இவ்வாலயத்தை பசிலிக்காவாக மாற்ற முயற்சிகள் துவங்கின.[2][3]

02, செப்டம்பர், 2011-அன்று திருப்பீட இந்திய தூதுவர், பேராயர் சால்வதோர் பெனோகியோ அவர்கள் இக்கோவிலுக்கு வந்து, திருத்தந்தையின் சார்பாக இதனை பசிலிக்காவாக உயர்த்தினார்.[4]

இது இம்மறைமாவட்டத்தின் முதல் பசிலிக்காவாகும். இதனோடு சேர்த்து, தமிழகத்தில் 6, இந்தியாவில் 20 மற்றும் ஆசியாவில் 50 பசிலிகாக்களும் உள்ளன.

Remove ads

படத்தொகுப்பு

ஆதாரங்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads