தேசிய விரைவுசாலை 2 (இந்தியா)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேசிய விரைவுச்சாலை 2 (National Expressway 2) அல்லது KGP (சோனிபத் (குன்ட்லி)-காசியாபாத்-பல்வல்) கிழக்குப்புறத்தில் தில்லியைக்கடந்து செல்லும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் தேசிய விரைவுச்சாலை ஆகும். இந்தியத் தலைநகரைச் சுற்றி அரை வட்டமாக இருக்குமாறு அமைக்கப்படவுள்ள இச்சாலை ஐந்து மாவட்டங்களை கடந்து செல்லும்: அரியானா மாநிலத்தின் சோனிபத் மற்றும் பரிதாபாத் & உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் பாக்பத், காசியாபாத் மற்றும் கெளதம் புத் நகர். இச்சாலை முழுவதிலும் ஊர்திகளின் வேக வரம்பு மணிக்கு 120 கி.மீ. ஆகும். இச்சாலையை மேம்படுத்த இந்திய அரசு நிதியளிக்க ஒப்புக்கொண்டுள்ளது.[1]
இந்தச் சாலையானது தில்லி வழியாகச் செல்லும் 50,000 சரக்குந்துகளுக்கு மாற்றுப் பாதையாக விளங்கும். மேலும் இது தில்லியின் காற்று மாசினை 27% வரை குறைக்கும்.[2][3] இது 27 மே 2018 அன்று பிரதமர் நரேந்திர மோதியினால் திறந்து வைக்கப்பட்டது.[4] இச்சாலை யமுனா விரைவுச்சாலையுடன் இணைக்கப்படும்.[5]
Remove ads
சாலையின் சிறப்புகள்
- சாலையின் இருபக்கமும் மிதிவண்டிக்கான தனித்தடம் (2.5 மீ அகலம்)
- ஒவ்வோர் அரை கிலோமீட்டருக்கும் மழை நீர் சேகரிப்பு வசதி
- அதிவிரைவாகச் செல்வோரைக் கண்காணிக்க கேமராக்கள்
- 135 கி.மீ நீளமுள்ள இச்சாலையில் சென்ற தொலைவுக்கு மட்டுமே கட்டணம் செலுத்தும் வசதி
மேலும் காண்க
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads