நங்கநல்லூர் இலட்சுமி நரசிம்ம நவநீத கிருஷ்ணன் கோயில்
தமிழ்நாட்டிலுள்ள ஒரு கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நங்கநல்லூர் இலட்சுமி நரசிம்ம நவநீத கிருஷ்ணன் கோயில் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம், நங்கநல்லூர் என்னும் ஊரில் அமைந்துள்ள ராமர் கோயிலாகும்.[1]
Remove ads
அமைவிடம்
கடல் மட்டத்திலிருந்து சுமார் 41 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் புவியியல் ஆள்கூறுகள்: 12°58'19.3"N, 80°11'02.6"E (அதாவது, 12.972022°N, 80.184059°E) ஆகும்.
வரலாறு
இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]
கோயில் அமைப்பு
இக்கோயிலில் இலட்சுமி நரசிம்ம சுவாமி சன்னதியும், ஸ்ரீநவநீத கிருஷ்ணர், இராமர், ஸ்ரீனிவாசப்பெருமாள், சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் தேர் உள்ளது. இக்கோயிலில் ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. 1927-ஆம் ஆண்டின் அறநிலையப் பாதுகாப்புச் சட்டப்படி அரசு நிருவாக அலுவலரால் நிர்வகிக்கப்படுகிறது.[2]
பூசைகள்
இக்கோயிலில் பாஞ்சராத்திர முறைப்படி மூன்று காலப் பூசைகள் நடக்கின்றன. மாசி மாதம் பிரமோற்சவம்-10 முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. வைகாசி மாதம் நரசிம்மர் ஜெயந்தி திருவிழாவாக நடைபெறுகிறது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads